Wednesday, May 27, 2020
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறை அருகே
மாட்டு வண்டியில் மணல் திருடி மலைபோல் வீட்டில் குவிப்பு.
2 பேரை கைது செய்த போலீசார். மணலை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. இதே போல் இன்றும் மாட்டு வண்டிகளில் மணலை திருடிச் சென்று வீட்டில் குவித்து வைத்து விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் அரியாறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்று வீடுகளில் குவித்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 40, சித்தநாதன் வயது 29 ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரியா வயது 28 என்பதை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மணப்பாறை வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்து வந்து குவித்து வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment