Wednesday, May 27, 2020
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறை அருகே
மாட்டு வண்டியில் மணல் திருடி மலைபோல் வீட்டில் குவிப்பு.
2 பேரை கைது செய்த போலீசார். மணலை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. இதே போல் இன்றும் மாட்டு வண்டிகளில் மணலை திருடிச் சென்று வீட்டில் குவித்து வைத்து விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் அரியாறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்று வீடுகளில் குவித்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 40, சித்தநாதன் வயது 29 ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரியா வயது 28 என்பதை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மணப்பாறை வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்து வந்து குவித்து வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment