Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து பீகார் மாநிலத்தை சர்ந்த 839 நபர்கள் 

சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு இன்று (27.5.2020) அனுப்பி வைக்கப்பட்டனர். 
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் 

தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள 
சொந்த ஊர்களுக்கு சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் 

 அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 248 அரியலூர் மாவட்டத்தில் 133
புதுக்கோட்டை மாவட்டத்தில் 157
பெரம்பலூர் மாவட்டத்தில் 148 திண்டுக்கல் 139 கரூர் 
14 ஆகிய 6 மாவட்டங்களில் பணிபுரிந்த வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 339
நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக 
இடைவெளியை கடைபிடித்து திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சனுக்கு அழைத்து
வரப்பட்டு மதிய உணவு வாட்டர் பாட்டில் பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் 
ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டு இன்று (27.05.2020) பீகார் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் 
மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட 
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு மற்றும் பலர் கலந்து 
கொண்டனர்.

0 comments: