Friday, December 05, 2014
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12
அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி
சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள்
வந்தன.இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கட்டடத்துக்கு ஆணையர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற முறையில் கட்டடம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் புதிய கட்டுமானத்திலுள்ள கட்டடத்துக்கு சீல் வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விழிப்புணர்வு முகாம்: புதூர் பகுதியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேயர், ஆணையர் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுகளை சுற்றிப்பார்த்து, டயர் போன்ற பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். சுகாதாரமற்ற கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணியையும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment