Friday, December 05, 2014
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12
அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி
சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள்
வந்தன.இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கட்டடத்துக்கு ஆணையர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற முறையில் கட்டடம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் புதிய கட்டுமானத்திலுள்ள கட்டடத்துக்கு சீல் வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விழிப்புணர்வு முகாம்: புதூர் பகுதியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேயர், ஆணையர் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுகளை சுற்றிப்பார்த்து, டயர் போன்ற பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். சுகாதாரமற்ற கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணியையும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment