Wednesday, December 31, 2014
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அக்பர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தால் சிறு, குறுந் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி வர்த்தகத்திலும் உயர்ந்துள்ள உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை பெற முடியாமல் தொழில் முனைவோர் தவித்துக் கொண்டுள்ளனர். இதேபோல், பால் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
தொடரும் இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றை திரும்பப் பெறுவதுடன், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழிற்சங்க தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சர்மிளாபாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment