Wednesday, December 31, 2014
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அக்பர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தால் சிறு, குறுந் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி வர்த்தகத்திலும் உயர்ந்துள்ள உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை பெற முடியாமல் தொழில் முனைவோர் தவித்துக் கொண்டுள்ளனர். இதேபோல், பால் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
தொடரும் இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றை திரும்பப் பெறுவதுடன், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழிற்சங்க தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சர்மிளாபாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment