Monday, December 29, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் -1930) அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாவித்திரி, 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் செல்வி, தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட 50 பெண்கள், வாலிபர் சங்கம் சார்பில் 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் முருகேஷ், 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துணை
ஆணையர் திருநாவுக்கரசு, சமரசப் பேச்சு நடத்தினார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா, இன்னும் 20 நாள்களில் இந்த டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து அகற்றுவதாக உறுதி அளித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment