Monday, December 29, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் -1930) அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாவித்திரி, 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் செல்வி, தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட 50 பெண்கள், வாலிபர் சங்கம் சார்பில் 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் முருகேஷ், 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துணை
ஆணையர் திருநாவுக்கரசு, சமரசப் பேச்சு நடத்தினார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா, இன்னும் 20 நாள்களில் இந்த டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து அகற்றுவதாக உறுதி அளித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...

0 comments:
Post a Comment