Thursday, December 25, 2014
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த 19 வயது பெண், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவரை காதலித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது, மோட்டார்சைக்கிளில் போலீஸ்போல் வந்த ஆசாமி, அவர்களை மிரட்டினார்.
இதைத்தொடர்ந்து மாணவியை மட்டும் விசாரணை என்று கூறி அழைத்துச்சென்ற அந்த ஆசாமி, ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மர்ம ஆசாமி குறித்து துப்புதுலக்குவதற்காக, 4 தனிப்படைகளை அமைத்து, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியில் கல்லூரி மாணவி, மோட்டார்சைக்கிளில் செல்வது பதிவாகி உள்ளது.
ஆனால் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் முகம் தெளிவாக தெரியவில்லை. கல்லூரி மாணவியை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் மருத்துவபரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தகவல்கள் தெரியவரும் என்றும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த 19 வயது பெண், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவரை காதலித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது, மோட்டார்சைக்கிளில் போலீஸ்போல் வந்த ஆசாமி, அவர்களை மிரட்டினார்.
இதைத்தொடர்ந்து மாணவியை மட்டும் விசாரணை என்று கூறி அழைத்துச்சென்ற அந்த ஆசாமி, ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மர்ம ஆசாமி குறித்து துப்புதுலக்குவதற்காக, 4 தனிப்படைகளை அமைத்து, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியில் கல்லூரி மாணவி, மோட்டார்சைக்கிளில் செல்வது பதிவாகி உள்ளது.
ஆனால் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் முகம் தெளிவாக தெரியவில்லை. கல்லூரி மாணவியை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் மருத்துவபரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தகவல்கள் தெரியவரும் என்றும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...

0 comments:
Post a Comment