Thursday, December 25, 2014
திருப்பூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவர் புதிய மின் இணைப்புக்காக வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). இவர் இடுவம்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் ஆண்டிபாளையம் லிட்டில்பிளவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் அதே பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அவருடைய கட்டிடத்திற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இடுவம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ரமேஷிடம் இளங்கோவன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரமேஷ் ரூ.50 ஆயிரம் பணத்தை மொத்தமாக கொடுக்க இயலாது. அதை தவணை முறையில் கொடுக்க முடியும் என்று ரமேஷ் கூறியதையடுத்து அதற்கு இளங்கோவன் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் ரமேஷ் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் ரமேஷிடம் கூறிய அறிவுரையின்படி நேற்று காலை அவர் இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அவர் இளங்கோவனிடம் முதல் தவணையாக கொடுப்பதாக கூறிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் நேற்று காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். இந்த அப்போது அங்கு கணக்கில் வராத பணம் ஏதாவது உள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையால் நேற்று காலை முதல் மாலை வரை மின்வாரிய அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூரில் புதிய மின் இணைப்புக்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment