Monday, December 29, 2014
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதலே ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை(டிசம்பர் 29) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிமாறும் நேரமான
மதியம் 12 மணிக்கு பின்னர் பேருந்துகளை இயக்குவதற்கு அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப் உள்ளிட்ட எதிர்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மாற்று ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வரவில்லை. இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் 558 பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டன. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை முழுமையாகச் சமாளிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
.jpg)
0 comments:
Post a Comment