Monday, December 29, 2014
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதலே ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை(டிசம்பர் 29) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிமாறும் நேரமான
மதியம் 12 மணிக்கு பின்னர் பேருந்துகளை இயக்குவதற்கு அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப் உள்ளிட்ட எதிர்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மாற்று ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வரவில்லை. இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் 558 பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டன. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை முழுமையாகச் சமாளிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
.jpg)
0 comments:
Post a Comment