Wednesday, December 24, 2014
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது36), இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனது தங்கை கார்த்திகா வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரது கணவர் சசிகுமாரிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். இது குறித்து கார்த்திகா தனது மற்றொரு அண்ணன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாலையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.காலையில் வெகுநேரமாகியும், கிருஷ்ணமூர்த்தியை காணாததால் அவரது தந்தை தோட்டத்து சாலைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டையால் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரை தம்பி மற்றும் தங்கை கணவர் அடித்துக்கொலைசெய்தார்களா? அல்லது மர்மமனிதர்கள் யாராவது அடித்துக்கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...

0 comments:
Post a Comment