Wednesday, December 24, 2014
அவர்களிடம் இருந்து 613 மூடை கோழித்தீவனம் மற்றும் தேங்காய் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அலங்கியம், காங்கயம், ஊதியூர், பல்லடம் மற்றும் கோவை மாவட்டம் சூலூர் ஆகிய இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூட்டைகளை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச்சென்றனர். அது மட்டுமல்ல காங்கயம், ஊதியூர் மற்றும் அவினாசிபாளையம் பகுதிகளில் தேங்காய் பருப்பு களத்தில் இருந்து தேங்காய் பருப்புகள் மற்றும் டிராக்டர்கள், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போனது.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் (வயது 40) கறி கோழிப்பண்ணையில் இருந்து அதிகாலை மர்ம ஆசாமிகள் சிலர் வேனில் கோழித்தீவன மூடைகளை திருடிச்சென்றனர். இதை பார்த்த சுரேஷ்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த வேனை சுரேஷ்குமாரும், போலீசாரும் விரட்டி சென்றனர். அப்போது போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி திருடர்கள் தப்பி சென்றபோது அவர்களின் வேன் மாந்தியாபுரம் அருகே ஒரு வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 திருடர்கள் தப்பி விட்டனர். சிறுவன் ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தாராபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவர் மாடசாமி என்ற ஆறுமுகம் (32) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த செண்பகத்தோட்டம் தென்றல்நகரை சேர்ந்தவர் என்றும் இவர் கட்டிட வேலைசெய்து வருவதாகவும், மற்றொருவர் தாமரைச்சாமி (வயது 35), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னசெட்டிபுதுரை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் என்றும் தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூடைகளை திருடியதாக போலீசில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 471 கோழித்தீவன மூடைகள், ரூ.3லட்சம் மதிப்புள்ள 142 மூடை தேங்காய் பருப்பு, 2 பவுன் நகை, 2மின் மோட்டார்கள், டிராக்டர்–1 மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...

0 comments:
Post a Comment