Wednesday, December 24, 2014
அவர்களிடம் இருந்து 613 மூடை கோழித்தீவனம் மற்றும் தேங்காய் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அலங்கியம், காங்கயம், ஊதியூர், பல்லடம் மற்றும் கோவை மாவட்டம் சூலூர் ஆகிய இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூட்டைகளை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச்சென்றனர். அது மட்டுமல்ல காங்கயம், ஊதியூர் மற்றும் அவினாசிபாளையம் பகுதிகளில் தேங்காய் பருப்பு களத்தில் இருந்து தேங்காய் பருப்புகள் மற்றும் டிராக்டர்கள், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போனது.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் (வயது 40) கறி கோழிப்பண்ணையில் இருந்து அதிகாலை மர்ம ஆசாமிகள் சிலர் வேனில் கோழித்தீவன மூடைகளை திருடிச்சென்றனர். இதை பார்த்த சுரேஷ்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த வேனை சுரேஷ்குமாரும், போலீசாரும் விரட்டி சென்றனர். அப்போது போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி திருடர்கள் தப்பி சென்றபோது அவர்களின் வேன் மாந்தியாபுரம் அருகே ஒரு வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 திருடர்கள் தப்பி விட்டனர். சிறுவன் ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தாராபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவர் மாடசாமி என்ற ஆறுமுகம் (32) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த செண்பகத்தோட்டம் தென்றல்நகரை சேர்ந்தவர் என்றும் இவர் கட்டிட வேலைசெய்து வருவதாகவும், மற்றொருவர் தாமரைச்சாமி (வயது 35), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னசெட்டிபுதுரை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் என்றும் தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூடைகளை திருடியதாக போலீசில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 471 கோழித்தீவன மூடைகள், ரூ.3லட்சம் மதிப்புள்ள 142 மூடை தேங்காய் பருப்பு, 2 பவுன் நகை, 2மின் மோட்டார்கள், டிராக்டர்–1 மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment