Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
பொங்கலூர் அருகே உள்ள குருநாதம்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது34). இவருக்கு சொந்தமான நல்லாந்தோட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்சார வயரை 2 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருநாவுக்கரசு அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.

0 comments: