Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

குரோயேஷிய அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர்
இம்முறைத் தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் தற்போதைய அதிபர் ஈவோ யூஸிபோவிச்சும் உள்ளார்.
 
கடைசியாக வந்த கருத்துக்கணிப்பின் படி, அதிபர் யூஸிபோவிச் தான் முன்னிலையில் உள்ளார்.
 
ஆனால், வெற்றிபெறத் தேவையான 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவரால் பெறமுடியாது போகலாம் என்பதால், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
குரோயேஷியாவில் அதிபர் பொறுப்பு பெயரளவு பதவியாக இருக்கின்ற போதிலும், முக்கிய அரசியல் கட்சிகள் தொடர்பில் நாட்டு மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தும் என்று பிபிசி பால்கன்ஸ் செய்தியாளர் கூறுகின்றார்.

0 comments: