Wednesday, August 27, 2014
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
செவ்வாயன்று காலை கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கே.தங்கவேல் எம்.எல்.ஏ., சென்றார். அங்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பறை கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னு, தலைமை ஆசிரியர் என்.உமாசாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இப்பள்ளியில் மொத்தம் 431 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் தேவையாக இருப்பதால் இந்த பள்ளிக்கும், மண்ணரையில் உள்ள பள்ளிக்கும் தலா 3 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் கே.தங்கவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கருமாரம்பாளையம் நியாயவிலைக் கடையை அவர் பார்வையிட்டார். அங்கிருந்த விற்பனையாளரிடமும், பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்களிடமும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்வது குறித்து கேட்டறிந்தார்.
கருமாரம்பாளையம் பள்ளி மற்றும் நியாயவிலை கடைகளை பார்வையிட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சுரேந்திரன், கிளை உறுப்பினர்கள் எம்.லட்சுமணன், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து கருவம்பாளையம் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது மாமன்ற உறுப்பினர் சந்திரா பழனிசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ச.பழனிசாமி, ஜி.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் லெனின்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பிறகு, கேவிஆர் நகர் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் பணியை அவர் பார்வையிட்டர். மாநகராட்சி உதவிப் பொறியாளர் முனியாண்டியிடம் இந்த பணி விபரம் குறித்து கேட்டறிந்தார்.
----------
(சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்ட படங்கள்)
வெடத்தலாங்காடு அங்கன்வாடி, கருமாரம்பாளையம் நியாயவிலைக்கடை, கருமாரம்பாளையம் பள்ளிக்கூடம், கேவிஆர் நகர் சமுதாயக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
0 comments:
Post a Comment