Wednesday, August 27, 2014
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
செவ்வாயன்று காலை கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கே.தங்கவேல் எம்.எல்.ஏ., சென்றார். அங்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பறை கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னு, தலைமை ஆசிரியர் என்.உமாசாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இப்பள்ளியில் மொத்தம் 431 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் தேவையாக இருப்பதால் இந்த பள்ளிக்கும், மண்ணரையில் உள்ள பள்ளிக்கும் தலா 3 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் கே.தங்கவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கருமாரம்பாளையம் நியாயவிலைக் கடையை அவர் பார்வையிட்டார். அங்கிருந்த விற்பனையாளரிடமும், பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்களிடமும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்வது குறித்து கேட்டறிந்தார்.
கருமாரம்பாளையம் பள்ளி மற்றும் நியாயவிலை கடைகளை பார்வையிட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சுரேந்திரன், கிளை உறுப்பினர்கள் எம்.லட்சுமணன், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து கருவம்பாளையம் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது மாமன்ற உறுப்பினர் சந்திரா பழனிசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ச.பழனிசாமி, ஜி.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் லெனின்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பிறகு, கேவிஆர் நகர் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் பணியை அவர் பார்வையிட்டர். மாநகராட்சி உதவிப் பொறியாளர் முனியாண்டியிடம் இந்த பணி விபரம் குறித்து கேட்டறிந்தார்.
----------
(சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்ட படங்கள்)
வெடத்தலாங்காடு அங்கன்வாடி, கருமாரம்பாளையம் நியாயவிலைக்கடை, கருமாரம்பாளையம் பள்ளிக்கூடம், கேவிஆர் நகர் சமுதாயக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment