Wednesday, August 27, 2014
லாரிகள் சிறைபிடிப்பு
அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை ஆழப்படுத்த ஈரோடு கனிமவளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் மண் அள்ள டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி லாரிகளில் சென்று கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அங்கு வந்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார், வருவாய் ஆய்வாளர் அழகேசன், கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள், ‘ஏரியில் அள்ளப்படும் மண் ஒரு லாரிக்கு ரூ.200 என்று விற்கப்படுகிறது. எண்ணமங்கலம், அந்தியூர், கெட்டிசமுத்திரம், கோவிலூர், பச்சாம்பாளையம், சின்னதம்பிபாளையம் உள்பட அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்துக்கு வண்டல் மண்ணை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே ஏரியில் அள்ளப்படும் மண்ணை விவசாயிகளுக்கே மட்டுமே விற்க வேண்டும். செங்கல் சூளைக்கோ, சாலை அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யாரும் ஏரியில் மண் அள்ளிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment