Saturday, August 09, 2014
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாணவர்களுக்கான போட்டி நடக்கிறது. நாளை மாணவிகளுக்கான போட்டி நடைபெறுகிறது.
மதுரை பி.பீ.குளத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கபடி போட்டி நடை பெற்றது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்து பேசியதாவது:–
தமிழகத்தில் முதல்– அமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ–மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக விளையாட்டு துறையையும் ஊக்கப்படுத்தி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டும் மாணவ– மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ– மாணவிகளுக்கு முதல்– அமைச்சர் அம்மா ரொக்கப் பரிசு மற்றும் விருதுகள் வழங்கி வருகிறார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 312 மாணவர்கள் இன்று நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பரிசு வழங்கப்படும்.
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் தங்கள் திறமையை ஒழுக்கத்துடன் கடைபிடித்து சாதனை படைக்க வேண்டும். தற்போது உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் தனி ஒதுக்கீடு உள்ளது. எனவே மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும்.
உயர் கல்விக்கு செல்லும் போது விளையாட்டு பிரிவில் ஒதுக்கப்படும் மாணவ–மாணவிகளில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் அதிக பேர் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் கதிரவன், மாநகராட்சி கல்வி அதிகாரி மேரி, கல்விக்குழு தலைவர் சுகந்தி அசோக், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, அ.திமு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், நிலையூர் முருகன், பாசறை பகுதி செயலாளர் டால்பின் அசோக், அமெச்சூர் கபடி நிர்வாகிகள் அகஸ்டின், செல்லூர் வல்லரசு, மாநகராட்சி செய்தி–மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் ஆசிரிய, ஆரியைகள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
