Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    


புனித ஹஜ் பயணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் மெக்கா மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் பிரசித்தி பெற்ற தலங்களுக்கு சென்று வருவார்கள்.
அவ்வாறு செல்லும் இஸ்லாமியர்களுக்கு வெளி நாடுகளில் தொற்று நோய் ஏற்பட்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதேபோல் வெளிநாடுகளுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று தொற்று நோய் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் அதுல் கலாம் ஆசாத் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 88 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

0 comments: