Saturday, August 09, 2014
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக நயினார் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறுகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:–2009–ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்தே மின்னனு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எந்திரங்கள் குறித்து பலர் புகார் கூறி, பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தவறுகள் நடக்க முடியாத நல்ல திட்டம் தான், மின்னனு வாக்கு எந்திர திட்டம்.
கே:–மீண்டும் வாக்குச் சீட்டு முறை அமலுக்கு வருமா?
ப:– மின்னனு எந்திரத்தில் தவறு இருந்தால் தானே இதுபற்றி யோசிக்க வேண்டும்.
கே:– கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் கணக்கை சமர்பித்து விட்டார்களா?
ப:– இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தணிக்கை செய்து வருகின்றனர். முறைப்படி தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கே:– கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அவசியம் என்ன?
ப:–அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் கூட தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கே:–தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?
ப:– வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டதால் அதை சரிசெய்த பின்னர் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறுகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:–2009–ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்தே மின்னனு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எந்திரங்கள் குறித்து பலர் புகார் கூறி, பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். தவறுகள் நடக்க முடியாத நல்ல திட்டம் தான், மின்னனு வாக்கு எந்திர திட்டம்.
கே:–மீண்டும் வாக்குச் சீட்டு முறை அமலுக்கு வருமா?
ப:– மின்னனு எந்திரத்தில் தவறு இருந்தால் தானே இதுபற்றி யோசிக்க வேண்டும்.
கே:– கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் கணக்கை சமர்பித்து விட்டார்களா?
ப:– இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தணிக்கை செய்து வருகின்றனர். முறைப்படி தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கே:– கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அவசியம் என்ன?
ப:–அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் கூட தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கே:–தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?
ப:– வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டதால் அதை சரிசெய்த பின்னர் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...