Friday, December 05, 2014
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்
முத்துராஜா(22). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார்.
வியாழக்கிழமை மாலை முத்துராஜாவும், அவரது நண்பர் அஜீத்தும் அருகில் உள்ள
தண்ணீர் தொட்டிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர்
கொண்ட கும்பல், முத்துராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த
முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற
அஜீத், இதுகுறித்து முத்துராஜாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், கொலையாளிகளை கைது
செய்யக்கோரி, முத்துராஜாவின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment