Friday, December 05, 2014
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: –
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, சென்னையில் 4.1.2014 அன்று நடைபெற்ற இந்து தர்ம பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில், பெரியார், இயேசு கிறிஸ்து, போப் ஆண்டவர், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அவரது, இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
ராஜாவின் பேச்சு, ‘யூ டியூப்‘பில் வெளியிடப்பட்டுள்ளது. ராஜா மீது வழக்கு பதிவு செய்யவும், ‘யூ டியூப்‘பில் உள்ள அவரது பேச்சு பதிவை நீக்கவும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எச்.ராஜா மீது இருபிரினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘மனுதாரரை போன்று எச்.ராஜா மீது கலிபூங்குன்றன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்), 505(2) (பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல்) ஆகியவற்றின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 1.10.2014 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment