Friday, December 05, 2014
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: –
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, சென்னையில் 4.1.2014 அன்று நடைபெற்ற இந்து தர்ம பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில், பெரியார், இயேசு கிறிஸ்து, போப் ஆண்டவர், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அவரது, இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
ராஜாவின் பேச்சு, ‘யூ டியூப்‘பில் வெளியிடப்பட்டுள்ளது. ராஜா மீது வழக்கு பதிவு செய்யவும், ‘யூ டியூப்‘பில் உள்ள அவரது பேச்சு பதிவை நீக்கவும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எச்.ராஜா மீது இருபிரினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘மனுதாரரை போன்று எச்.ராஜா மீது கலிபூங்குன்றன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்), 505(2) (பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல்) ஆகியவற்றின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 1.10.2014 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment