Friday, December 05, 2014
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விளை
நிலங்கள் மற்றும் வீடுகளை கிரானைட் அதிபர்கள் அபகரித்து விட்டதாக
பொதுமக்கள் அவரிடம் புகார் கூறினர்.மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அப்போதைய கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்று முன்தினம் மதுரை வந்தார்.
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அவருக்கான தனி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று காலை தனி அலுவலகத்துக்கு மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது குறைகளை கூறுவதற்காக மனுக்களுடன் வந்தார்கள். ஒவ்வொருவராக சென்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் மனுக்களை நேரில் கொடுத்தனர்.
அப்போது, “கிரானைட் குவாரி அதிபர்களால் எங்கள் விளை நிலங்கள், வீடுகளை இழந்துவிட்டோம். அவற்றை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்று ஏராளமானோர் தெரிவித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கிரானைட் முறைகேடுகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொதுமக்கள் இழந்துள்ள வீடு, நிலங்கள் குறித்தும் கோர்ட்டில் தனது அறிக்கையை கொடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, விசாரணையின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால், விசாரணை அதிகாரி சகாயத்திற்கும், அவருடைய குழுவினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment