Tuesday, May 26, 2020
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 26
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
கோவிந்தராஜூலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஆட்சியரை சந்தித்தோம். கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தி எங்களது குறைகளையும், அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறினோம். மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான சம்பளம் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவித்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அரசு எடுத்து அறிவிக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும். சனிக்கிழமை முதல் தொழில் நிறுவனங்களை திறந்து தொழில் புரியலாம் என்று தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் வெள்ளிக் கிழமைக்குள் அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment