Showing posts with label Trichy sabarinathan 9443086297. Show all posts
Showing posts with label Trichy sabarinathan 9443086297. Show all posts

Friday, August 19, 2022

On Friday, August 19, 2022 by Tamilnewstv in    

 *புதிய வகை* *ஆன்லைன் மோசடி:*

*டி.ஜி.பி. சைலேந்திர  பாபு எச்சரிக்கை*



தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு

 ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.


தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள் பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை

 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். 


அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-


ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. 


நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்.


 அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.

கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன்

என்பது உங்களுக்கு தெரியும். 


இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 


காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். 

இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். 

இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம். 

தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு

'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். 


ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள்.

பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

Thursday, June 18, 2020

On Thursday, June 18, 2020 by Tamilnewstv in    
*திருச்சி

*உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பி.ஜே.பியினர் உறுதி மொழி ஏற்றனர்.*

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 15-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டது. இதில் தமிழக வீரர் பழனி உட்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.

 வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் இறுதி சடங்கு இன்று அவரது சொந்த ஊரான‌ ராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த பாரதிய‌ ஜனதா மாநிலத் தலைவர் முருகன் இவ்வுறுதி மொழி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

சீனாவின் இந்த அராஜக செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இனி சீனப் பொருட்களையும், சீன மென்பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என்றும் இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோமென பாரதிய‌ ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி யினர் உறுதிமொழி ஏற்றனர்.
On Thursday, June 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் 


அவர் பதவி வகிக்கும் கட்சியின் கட்சித் தலைவரை இழிவாக பேசிய ரகசிய வீடியோ

 தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற போலி நிறுவனம் நடத்தி வருபவர்கள் எல்பின் நிதிநிறுவன உரிமையாளர்கள் 


எல்பின் நிதி  நிறுவனத்தை பற்றி உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய வீடியோ

ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இவர்களைப் பற்றி பல்வேறு ரகசிய தகவல்களை வெளியிடும் பரமசிவம் என்கிற பரம வளவன் இவர்கள் மட்டுமன்றி தான் பொறுப்பு வகிக்கும் கட்சித் தலைவரை அசிங்கமாகவும் இழிவுபடுத்திப் பேசிய வீடியோவால் தமிழகத்தில் பரபரப்பு


மேலும் பல உண்மை வீடியோ ஆதாரங்களுடன் சந்திப்போம்


Wednesday, June 17, 2020

On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. 

  திருச்சி-கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். 

 அப்போது வாரணாசி தேர்தலில் போட்டியிட வேண்டாம். 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். நதிகள் இணைக்கப்படும். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்படும். 5 லட்சம் ரூபாய் கடன் வட்டி இல்லாமல்  கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். 

 ஆனால் ஓராண்டாகியும் இன்னும் அவற்றை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். லாபகரமான விலை கொடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டி விரைவில் டெல்லி சென்று நிர்வாண போராட்டம் நடத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். ஆனால் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

 குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  தற்போது உள்ள தண்ணீர் 40 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் சென்றுவிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் 10 நாட்கள் ஆனாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாது என்றார். 
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் சின்ன மைதான மார்க்கெட்டில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி, மீன், கருவாடு, கோழி மற்றும் ஆடு இறைச்சி  கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள மார்க்கெட்டை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்து கொடுக்கவேண்டும். செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி இன்று காய்கறி, மீன் மற்றும் கோழிக்கறி வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வைத்து நிதி நிறுவனம்.

 நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற நிறுவனம் நடத்திவரும் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அவர்களின் கூட்டாளிகள் பலரின் மீது தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 சமீபத்தில் ராஜ்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து 45 லட்சம் பெற்று தருமாறு புகார் அளித்திருந்தார் தற்போது இன்றைக்கு சேகர் என்பவர் மேலும் ஒரு புகாரை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 
அவர் அளித்துள்ள புகாரில்

அந்தப் புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.


 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 29.11.2019 ஆம் ஆண்டு  மொத்தம் 4 1/2 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 9 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர்.

  இந்த காசோலையை பெறுவதற்கு சேகர் அலைந்து திரிந்து இரண்டு மாதங்கள்  பின்பு தான்   ஒரு வருடம் பின் தேதியிட்ட மேற்படி காசோலையை எல்பின் சகோதரர்கள் ஆலோசனையின் பேரில் இவர்களுக்கு கைக்கூலியாக பினாமியாக உள்ள நபர் பாபு கொடுத்துள்ளார்.


 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என சேகர் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பாபு என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

 மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி என்பவர் தொடர்ச்சியாக இணையதளத்தில் மக்களுக்கு இந்த மோசடி நிறுவனம் குறித்த பல்வேறு தகவல்களை மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் மக்களுக்கு செய்தியை அளித்து வந்தார்.

 ஆனாலும் மக்கள்  இவர்களின் மூளைச்சலவை ஆசை வார்த்தை நம்பி இவர்களிடம் பணம் செலுத்தி  பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக தனது சமூக பணியை மக்கள் பாதிக்காத அளவிற்கு மக்களின் பணத்தை மீட்டு இவர்களின் போலி முகத்திரையை கிழித்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும்வரை ஓயமாட்டேன் என்று சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

Tuesday, June 16, 2020

On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
 திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு முழுவதும், நோயாளிகளுக்கு, 'ஆக்சிஜன்' செலுத்தும் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  
 திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு உள்ளது. 

 இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வாரங்களாக, திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், எதிர்கால தேவை கருதி, இந்த அரசு மருத்துவமனையில், ஆறு மாடிகள் உடைய, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டடத்தில் உள்ள வார்டுகள் அனைத்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன

 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில், இங்குள்ள, 350 படுக்கைகளுக்கும், பிரத்யேக குழாய் அமைத்து, 'ரெகுலேட்டர்'கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே, 'கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், இந்த வார்டில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி

கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மஞ்சதிடல் பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  
பெண்கள் சிலர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.

 பாதுகாப்பு காரணங்களுக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக நாடு தழுவிய கண்டன நாள் என்ற தலைப்பில் மாநில மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம்
 மத்திய_மாநில_அரசுகளே!கொரோனாவால்_பாதிக்கப்பட்ட_மக்களுக்கு_நிவாரணம்_வழங்கக் கோரி அகில_இந்திய_அளவிலான #ஆர்ப்பாட்டம்_ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) சார்பில் திருவெறும்பூர்_காந்தி நகர், செல்வபுரம் கிளை_சார்பில்_செல்வபுரம் ரேசன் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் தஸ்தகீர் தலைமையில்
பா.லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் தவுலத் பாண்டியன், ராதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
மோடி அரசே!
எடப்பாடி அரசே
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,
   குடும்பத்துக்கு ரூ7500/- மாதா மாதம் நிவாரணம் வழங்கு,
    100நாள் வேலையை200 நாட்களாக உயர்த்தி 256/- தினக்கூலியை கொடு.
     வங்கி_தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனக்கான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்.
    முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே,
   நகர்புற வேலையில்லாதோர்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டி

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருச்சி மாநகரில் 70 மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்

அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 2014 வரை சிங்கப்பூரில் பணி செய்து வந்ததாகும் பணியின் போது நடந்த விபத்தினால் கிடைத்த இழப்பீடு தொகையாக 48 லட்சம் ரூபாயை சிங்கப்பூர் அரசு அவருக்கு நஷ்ட ஈடாக கொடுத்ததை கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 13.11.2019 ஆம் ஆண்டு முதல் 5.12.2019 வரை மொத்தம் 45 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர் இந்த காசோலையை பெறுவதற்கு இவர்கள் இரண்டு மாதங்கள் ராஜ்குமாரை படைத்துள்ளனர் பின்பு 48 நாட்கள் கழித்து பின் தேதியிட்ட மேற்படி காசோலையை கொடுத்துள்ளனர்.

 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என ராஜ்குமார் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பால்ராஜ் என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஓலா கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்தவரின் கோடீஸ்வரரான ரகசியம் தங்கிய வாடகை ரூம் வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் மானத்திற்கு அஞ்சி தூக்கில் தொங்கி விடுவதாக ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு இருந்த நபரின் கோடீஸ்வரரான ரகசியம் பல 100 கோடி கொள்ளை அடித்தது எப்படி பல ஆதாரங்களுடன்
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 15

 திருச்சி ஜி கார்னரில் செயல்பட்டு  வரும் காய்கறி வியாபாரிகள்  தங்கள் கடைகளை மீண்டும் காந்தி மார்கெட்டிற்கு  மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர் 


 இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் காந்தி மார்க்கெட்  அனைத்து காய்கறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு இக்கூட்டத்தில் அவருடன் 50க்கு மேற்பட்டோர்கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

 இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களை சந்தித்து முறையிட கடந்த வாரம் அவர் சென்னை சென்று வந்தார் இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது 


 இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி தேவர் ஹாலில் வியாபாரிகளும் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவர்  சாந்தி தலைமையில் நடைபெற்றது.

   நூற்றுக்கும் மேற்பட்ட  பி.ஆர்.சி எனப்படும் கொரோனா தொற்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முன்னதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி பரிசோதனை நடைபெறுவதை  பார்வையிட்டார்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 15

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம்
அழைத்து வர வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இணையவழி போராட்டம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் திரும்பி அழைத்து வர வலியுறுத்தி  வலியுறுத்தி 
மாநில பேச்சாளர் ரஹமத்துல்லா தலைமையில் 
இணையவழி

போராட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ரஹமத்துல்லா கூறியதாவது 
கொரனா வைரஸ் காரணமாக ஊரடங்கு 
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும் அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் இந்த இணைய வழி போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது

கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன்  எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி  வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு - திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

இந்நிலையில், நாளை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகாலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.

குறுவை பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2011இல் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நிலத்தடி நீராதாரங்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலேயே தொடர்ந்து வந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூருக்கு நேரில் வந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தார். விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது.

கரூர் மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்ததால், முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே காலையில்தான் வந்து சேர்ந்தது. மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை நிரப்பியபடி வந்து செல்ல தாமதமானது. பின்னர், தாமதமாக முக்கொம்பு மேலணைக்கு பிற்பகலில் வந்தது.

இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனர். இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர்.

பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்  மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது .


திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட 20 ஊராட்சிகளை சேர்ந்த 200 தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் வழங்கினார். துணைத்தலைவர் வனிதா சத்தியசீலன், அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளாக அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, உணவு ஆகியவை வழங்கப்பட்டது.

Sunday, June 14, 2020

On Sunday, June 14, 2020 by Tamilnewstv in    
*சொத்து தகராறில் தென்னை மரங்களை வெட்டி கடத்திய விஹெச்பி மாநில பொருளாளருக்கு போலீஸ் வலை* 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன் (76) விசுவஹிந்து பரிசத்தின்  மாநில பொருளாளராக உள்ளார்.  இவருக்கும் இவரது உறவினரான தியாகராஜன் (61) என்பவருக்குமிடையே சொத்துதகறாறு இருந்துவந்த நிலையில் தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநிலையில் பாண்டியன் கடந்த 9 ம்தேதி சம்பந்தப்பட்ட விவசாய தோட்டத்தில் தோப்பில் இருந்த 80 தென்னை மரங்களை 20 பணி ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியாகராஜன் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாண்டியனை கைது செய்யசென்றபோது அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரது காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த போலீசார் பாண்டியனை தேடி வருகின்றனர்.
On Sunday, June 14, 2020 by Tamilnewstv in    
விராலிமலை அருகே குடும்பத்தகறாறில் கிணற்றில் குத்தித்த இளம்பெண் உயிருடன் மீட்பு

   புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மதுமதி (19). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான மதுமதி அவர்களது தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றினுள் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் பலத்த காயமடைந்த நிலையில் கிணற்றில் இருந்து கூக்குரல் எழுப்பிய மதுமதியை மீட்க தீயணைப்புதுறையினருக்காக காத்திராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிணற்றினுள் இறங்கி கயிற்றுக்கட்டில் மூலம் கயிறு கட்டி மதுமதியை கிணற்றில் இருந்து மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

Thursday, June 11, 2020

On Thursday, June 11, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் 

பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந்துள்ளதை கான்கரிட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டு 
வரும் பணியை பொதுபணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி 
இன்று(11.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



 திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் சுமார் 
19500 ஏக்கர் பாசனம் அளிக்கக்கூடியது இந்த வாயக்காலின் தலைப்பு மதகு 1934ஆம் ஆண்டு 
கட்டப்பட்டது.
 இந்த தலைப்பு மதகில் அடைப்பு பலகைகள் உள்ள பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார 
பகுதிகள் செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க 
கைப்புறச்சுவர் திடிரென சாய்ந்து விட்டது. இச்சுவர் செங்கல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை 
மேலும் 80 ஆண்டுகளைக் கடந்து உள்ளதாலும் பழுதடைந்துவிட்டது.
 இச்சுவர் விழுந்ததினால் பெருவளை வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் 
எவ்வித இடையறும் இல்லை. இருப்பினும் போக்குவரத்திற்கு  சிரமம்இல்லாமல் இரவு பகலாக 
இப்பழுதடைந்த பகுதியினை கான்கிரிட் கலவை கொண்டு செப்பணிடப்பட்டு வருகின்றது. இன்னும் 15 
நாட்களுக்குள் பணிகளை முழுமையாக முடிக்கப்படும் என பொதுபணித்துறை திருச்சி மண்டல 
தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 ஆய்வின் போது பொதுபணித்துறை நடுகாவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம்  பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக்கோட்ட 
செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர்கள் ஜெயராமன் புகழேந்திரன் மற்றும் 
பலர் உடனிருந்தனர் .
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் கொரோனா தொற்று ..! பாதுகாப்பை பலப்படுத்தாத அதிகாரிகள்..!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நேற்று வரை 132 பேர் கொரோனாவிற்கு பாதித்து இருந்தனர். இதில் 105 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.


 இதை அடுத்து 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சமயபுரம் பகுதியில் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதாக 2 பேர் தனிமை படுத்துவதற்காக திருச்சி  அரசு தலைமை மருத்துவ மனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர், தற்பொழுது அவர்கள் இருந்த இடம் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எந்த வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் மேலும் அப்பகுதியில் கொரோனா  பரவும் அச்சம் நிலவி வருகிறது, 

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விசுவநாதன் அவர்களிடம் செய்தியாளர்கள்  பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை பிறகு நாங்க பாக்காத பிரஸ் அஹ என கூறி மழுப்பி சென்றுவிட்டார்.

Wednesday, June 10, 2020

On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 10


இந்து முன்னணி  சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். 
                    

இந்தியவில் கொரோனா  பாதிப்பு அடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி மூடப்பட்டது. 
5ம்முறையாக ஊரடங்கு உத்தரவிட்டதை தொடர்ந்து 
ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு 
தளர்வுகளும்  வழங்கப்பட்டது 
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து
மத வழிபாட்டுத் தலங்களை திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து போரட்டம் நடித்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி  கோவில் முன்பு  இந்து
முன்னணி
பேச்சாளர் மணிகண்டன் தலைமையில் 
ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது  தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.