Wednesday, June 17, 2020
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வைத்து நிதி நிறுவனம்.
நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற நிறுவனம் நடத்திவரும் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அவர்களின் கூட்டாளிகள் பலரின் மீது தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் ராஜ்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து 45 லட்சம் பெற்று தருமாறு புகார் அளித்திருந்தார் தற்போது இன்றைக்கு சேகர் என்பவர் மேலும் ஒரு புகாரை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில்
அந்தப் புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 29.11.2019 ஆம் ஆண்டு மொத்தம் 4 1/2 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 9 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர்.
இந்த காசோலையை பெறுவதற்கு சேகர் அலைந்து திரிந்து இரண்டு மாதங்கள் பின்பு தான் ஒரு வருடம் பின் தேதியிட்ட மேற்படி காசோலையை எல்பின் சகோதரர்கள் ஆலோசனையின் பேரில் இவர்களுக்கு கைக்கூலியாக பினாமியாக உள்ள நபர் பாபு கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என சேகர் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பாபு என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி என்பவர் தொடர்ச்சியாக இணையதளத்தில் மக்களுக்கு இந்த மோசடி நிறுவனம் குறித்த பல்வேறு தகவல்களை மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் மக்களுக்கு செய்தியை அளித்து வந்தார்.
ஆனாலும் மக்கள் இவர்களின் மூளைச்சலவை ஆசை வார்த்தை நம்பி இவர்களிடம் பணம் செலுத்தி பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக தனது சமூக பணியை மக்கள் பாதிக்காத அளவிற்கு மக்களின் பணத்தை மீட்டு இவர்களின் போலி முகத்திரையை கிழித்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும்வரை ஓயமாட்டேன் என்று சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment