Tuesday, June 16, 2020
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு முழுவதும், நோயாளிகளுக்கு, 'ஆக்சிஜன்' செலுத்தும் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு உள்ளது.
இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வாரங்களாக, திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், எதிர்கால தேவை கருதி, இந்த அரசு மருத்துவமனையில், ஆறு மாடிகள் உடைய, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டடத்தில் உள்ள வார்டுகள் அனைத்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில், இங்குள்ள, 350 படுக்கைகளுக்கும், பிரத்யேக குழாய் அமைத்து, 'ரெகுலேட்டர்'கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே, 'கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், இந்த வார்டில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment