Sunday, June 14, 2020

On Sunday, June 14, 2020 by Tamilnewstv in    
விராலிமலை அருகே குடும்பத்தகறாறில் கிணற்றில் குத்தித்த இளம்பெண் உயிருடன் மீட்பு

   புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மதுமதி (19). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான மதுமதி அவர்களது தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றினுள் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் பலத்த காயமடைந்த நிலையில் கிணற்றில் இருந்து கூக்குரல் எழுப்பிய மதுமதியை மீட்க தீயணைப்புதுறையினருக்காக காத்திராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிணற்றினுள் இறங்கி கயிற்றுக்கட்டில் மூலம் கயிறு கட்டி மதுமதியை கிணற்றில் இருந்து மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

0 comments: