Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்

அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 2014 வரை சிங்கப்பூரில் பணி செய்து வந்ததாகும் பணியின் போது நடந்த விபத்தினால் கிடைத்த இழப்பீடு தொகையாக 48 லட்சம் ரூபாயை சிங்கப்பூர் அரசு அவருக்கு நஷ்ட ஈடாக கொடுத்ததை கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 13.11.2019 ஆம் ஆண்டு முதல் 5.12.2019 வரை மொத்தம் 45 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர் இந்த காசோலையை பெறுவதற்கு இவர்கள் இரண்டு மாதங்கள் ராஜ்குமாரை படைத்துள்ளனர் பின்பு 48 நாட்கள் கழித்து பின் தேதியிட்ட மேற்படி காசோலையை கொடுத்துள்ளனர்.

 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என ராஜ்குமார் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பால்ராஜ் என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஓலா கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்தவரின் கோடீஸ்வரரான ரகசியம் தங்கிய வாடகை ரூம் வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் மானத்திற்கு அஞ்சி தூக்கில் தொங்கி விடுவதாக ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு இருந்த நபரின் கோடீஸ்வரரான ரகசியம் பல 100 கோடி கொள்ளை அடித்தது எப்படி பல ஆதாரங்களுடன்

0 comments: