Thursday, June 18, 2020

On Thursday, June 18, 2020 by Tamilnewstv in    
*திருச்சி

*உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பி.ஜே.பியினர் உறுதி மொழி ஏற்றனர்.*

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 15-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டது. இதில் தமிழக வீரர் பழனி உட்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.

 வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் இறுதி சடங்கு இன்று அவரது சொந்த ஊரான‌ ராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த பாரதிய‌ ஜனதா மாநிலத் தலைவர் முருகன் இவ்வுறுதி மொழி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

சீனாவின் இந்த அராஜக செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இனி சீனப் பொருட்களையும், சீன மென்பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என்றும் இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோமென பாரதிய‌ ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி யினர் உறுதிமொழி ஏற்றனர்.

0 comments: