Thursday, September 17, 2020
நீதிமன்ற விதிகளை மீறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தார் வழக்கறிஞர் சரமாரி புகார்
30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த
7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார்
திருச்சி:
தனி நபருக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் போலீஸ் காலனி அருகே அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேச பாண்டியன். இவர் அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு குண்டூர்- போலீஸ் காலனி இடையிலான 100 அடி சாலையில் ஏழு ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலத்தில் முருகேச பாண்டியன் விவசாயம் பார்த்து வந்தார். அதோடு கோழிப் பண்ணையும் அமைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு என்று கூறி மாவட்ட நிர்வாகம் நிலத்தை கைப்பற்றியது. திருவெறும்பூர் தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று, வயல் வரப்புகள் மற்றும் கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அவள் பட்ட காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து முருகேச பாண்டியன் வழக்கறிஞர் வடிவேலு கூறியதாவது: இந்த 7 ஏக்கர் நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக முருகையா பாண்டியன் நிர்வகித்து வருகிறார். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் அவசரஅவசரமாக ஆக்கிரமிப்பு என்று கூறி இதை அகற்றியுள்ளனர். இது சட்ட விரோதமாகும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். முதியவரான முருகேச பாண்டியனை மாவட்ட நிர்வாகம் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் நீதிமன்றத்தின் வாயிலாக இவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என்று வழக்கறிஞர் வடிவேல் பேட்டி அளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment