Thursday, September 17, 2020
நீதிமன்ற விதிகளை மீறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தார் வழக்கறிஞர் சரமாரி புகார்
30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த
7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார்
திருச்சி:
தனி நபருக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் போலீஸ் காலனி அருகே அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேச பாண்டியன். இவர் அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு குண்டூர்- போலீஸ் காலனி இடையிலான 100 அடி சாலையில் ஏழு ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலத்தில் முருகேச பாண்டியன் விவசாயம் பார்த்து வந்தார். அதோடு கோழிப் பண்ணையும் அமைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு என்று கூறி மாவட்ட நிர்வாகம் நிலத்தை கைப்பற்றியது. திருவெறும்பூர் தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று, வயல் வரப்புகள் மற்றும் கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அவள் பட்ட காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து முருகேச பாண்டியன் வழக்கறிஞர் வடிவேலு கூறியதாவது: இந்த 7 ஏக்கர் நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக முருகையா பாண்டியன் நிர்வகித்து வருகிறார். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் அவசரஅவசரமாக ஆக்கிரமிப்பு என்று கூறி இதை அகற்றியுள்ளனர். இது சட்ட விரோதமாகும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். முதியவரான முருகேச பாண்டியனை மாவட்ட நிர்வாகம் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் நீதிமன்றத்தின் வாயிலாக இவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என்று வழக்கறிஞர் வடிவேல் பேட்டி அளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment