Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி
மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவில் பணியாற்றி வருகின்ற மருத்துவர் ரோஹைய கூறுகையில்

மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை மக்கள் சந்தித்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்

ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீடிப்பு செய்துள்ளார்
மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு மக்கள் வெளி உலகத்திற்கு வரும்பொழுது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலிருந்து தங்களுடைய எதிர்ப்பு சக்தியை உணவுகள் மூலமாக மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்கள் வெளி நடமாட்டத்திற்கு வரும் பொழுது கொரோனா நோய்தொற்று அவர்களை தாக்காமல் இருக்கும் என்பதற்காக மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மேலும் நியாயவிலைக்கடை அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கும் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக ஒருவார காலத்திற்கு உரிய உணவுகள் இதனால் வரை வழங்கியுள்ளோம் மேலும் தொடர்ச்சியாக வரும் 20 ஆம் தேதி அன்று ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க உள்ளோம் என்றும்

தலைவர் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்கள் தொடங்கிய இந்த குழு தமிழகமெங்கும் தொடர்ச்சியாக நாங்கள் சேவை செய்து வருகிறோம் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்பு மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை சந்திக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று மதிமுகமாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹைய தெரிவித்தார்

0 comments: