Monday, February 24, 2020
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே தகுதிப்பட்டை வழங்கப்பட்டது.
ஷோட்டோ கான் கராத்தே வேர்ல்டு பெடரேஷன் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிறைவு விழா திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தாங்கள் பெற்ற பயிற்சியினை அவர்கள் செய்முறை வழியாக வெளிப்படுத்திய பின் தகுதி அடிப்படையில் கராத்தே பட்டைகள் வழங்கப்பட்டது. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தகுதி பட்டைகளை தலைமை பயிற்சியாளர் சங்கர் வழங்கினார். இது குறித்து திருச்சி மாவட்ட தற்காப்பு பயிற்சி தலைமை பயிற்சியாளர் பத்மா கூறும்போது..... பெண்களுக்கு சவால் தரும் காலகட்டம் தற்போது நிலவி வருகிறது. எனவே இதன் அவசியத்தை கருதி பெண்கள் கராத்தே பயில்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழக அரசு இதனை பள்ளிகளில் பாடமாகக் கொண்டு வந்து பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment