Sunday, February 23, 2020
திருச்சியில் 6 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி செந்தண்ணீ புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை கட்டினார். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அவர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது....... நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் மக்கள் என்னிடம் வைக்கும் பத்து கோரிக்கைகளில் என்னால் முடிந்த இரண்டு, மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். திமுக ஆட்சி அமையும்போது பத்துக்கு பத்து என அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தருவேன் என்றார். இவ்விழாவில் பகுதி செயலாளர் தர்மராஜ், வட்டச்செயலாளர்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை, வரதராஜன், மணி, தவசீலன் தங்கவேல் , செல்வராஜ், இளைஞரணி ஜோஸ்வா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment