Friday, September 29, 2023
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு கோரிக்கைகளை வரிவொருத்தி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியிலே தேவேந்திர வெளாளர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரு நபர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுமற்றும் சுமார் 75 மாவட்டசெயலாளர் ஒருவர் கூட தேவேந்திர வெளாளர்கள்சமுதாயத்தை சேர்ந்தவர்கள்ஒருவர் கூட திமுக மாவட்ட செயலாளர் ஆகஇல்லை மற்றும் 21 மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தேவேந்திர குல வெளாளாளர்களுக்கு வழங்கவில்லை மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் .மு. கண்ணுச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்துக் கட்சி தேவேந்திர குல வெளnளாளர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் வழக்கறிஞர் முத்துச்சாமி, சேட்டு, செல்வராஜ், ராஜமாணிக்கம், ராணி, ஆறுமுகம், சிற்றரசு, மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
Saturday, June 17, 2023
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
மதுரையில் தலைமை இடமாகக் கொண்டு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் வழக்கறிஞர்கள் குழு பகீர் குற்றச்சாட்டு
சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் குழு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் கொண்டு எலக்ட்ரோ ஹோமியோபதி என்கிற பெயரில் ஐந்தாண்டு மருத்துவம் படித்தது போல் சான்றிதழ்
இதழ்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி போலி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் உலாவி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மையமாக வைத்து பல்வேறு ஆங்கில மற்றும் சித்த மருத்துவம் காலாவதியான மருந்துகளை வைத்து மருத்துவம் செய்து வந்துள்ளார் மேலும் ஊசி மருந்துகள் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார்
பொன்ராஜ் என்பவர் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் வழக்கறிஞர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது
அப்போது பொன்ராஜ் என்பவர் அக்குபஞ்சர் மருத்துவம் செய்து வருவதாக கூறினர்
அதன் அடிப்படையில் மருத்துவ குழு பொன்ராஜ் அவர்களை சந்தித்து மருத்துவம் செய்ய கோரிய பொழுது நான் எலெக்ட்ரோ ஹோமியோபதி என்ற மருத்துவம் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்
அவரும் மருத்துவம் செய்துள்ளார், அருகில் ஊஷி ஆங்கில மருத்துவம் பார்த்துள்ளார், வழக்கறிஞர்கள்
கண்டறிந்து ஆதாரங்கள் திரட்டி இணை இயக்குனர் சுகாதாரத்துறை அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது ஆய்வு செய்து அவருடைய சான்றிதழ் போலியான நிரூபிக்கும் அளவிற்கு தெரியவந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றனர் இன்ஜினியரிங் படிப்பில் மின்சார சார்ந்த படிப்பை படித்துள்ள பொன்ராஜ் எந்த ஆண்டு எங்கு எதன் அடிப்படையில் மருத்துவ படிப்பு படித்துள்ளார் என்பதை விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை பதில் இல்லை என்று வழக்கறிஞர்கள் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது போன்ற போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்தால் பொதுமக்களிடையே அரசின் மீது நம்பிக்கை தன்மை இழந்து விடும் ஆகையால் மருத்துவ துறை சார்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போலி மருத்துவர்கள் கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சார்பாக தெரிவித்துள்ளனர் அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற போலி மருத்துவர்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்க முடியும் எனவும் வலியுறுத்துகின்றனர் அரசு உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்துகின்றனர் எலக்ட்ரோ ஹோமியோபதி தமிழக அரசால் ஏற்காத நிலையில் உள்ள இந்த படிப்பை படித்தோம் எனக் கூறிக்கொண்டு மருத்துவம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
Sunday, August 28, 2022
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம்.
இம்மருத்துவமனையில் நான்கு கோணங்களில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படுகிறது.
அவை, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் சிகிச்சை, புற்று நோய் நிவாரணம் மற்றும் புற்றுநோய் மறுவாழ்வு ஆகியவை.
2010ஆம் ஆண்டு திருச்சி தில்லைநகர் பகுதியில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, பின்னர் உறையூருக்கு மாற்றப்பட்டு, தற்போது திருச்சி நாகமங்கலத்தில் புற்றுநோய்க்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையத்தை நிறுவியுள்ளது.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சியில் புற்றுநோய் சிகிச்சையில் ட்யூமர் போர்டு என்ற கருத்தை நடைமுறைப்படுத்திய முதல் மருத்துவமனையாகும்.
ட்யூமர் போர்டு என்பது அறுவைசிகிச்சை புற்றுநோயியல், கதிர்வீச்சு மற்றும் புற்றுநோயியல் மருந்து (கீமோதெரபி) போன்ற பல்வேறு சிறப்புகளால் அமைக்கப்பட்ட ஒரு பல்துறை குழு கூட்டம் ஆகும்.
இதன் மூலம் மூன்று சிறப்பு மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே இடத்தில் கலந்து ஆலோசித்து, நோயாளிக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அல்லது மருந்தியல் சிகிச்சை தேவையா என்பதை தீர்மானிக்கிறார்கள். புற்று நோயின் நிலை மற்றும் நோயின் தீவிரம் பொருத்து இந்த கூட்டு சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது.
இந்த ட்யூமர் போர்டு சிகிச்சையின் மூலம், நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
"புற்றுநோய் சிகிச்சையில், கதிர்வீச்சு சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.
கதிரியக்க சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன, அவை வெளிப்புற கதிர்வீச்சு மற்றும் உள் கதிர்வீச்சு என்று அழைக்கப்படுகின்றன.
வெளிப்புற கதிர்வீச்சு முப்பரிமாண கதிர்வீச்சு, தீவிர பண்பேற்றப்பட்ட கதிர்வீச்சு, விரைவான வில் கதிர்வீச்சு போன்ற பல்வேறு நுட்பங்களில் வழங்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்புற கதிர்வீச்சின் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல வகையான புற்றுநோய்களுக்கு அதிக பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளித்து வருகிறது.
கதிரியக்க சிகிச்சையைப் பயன்படுத்தி, பல சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம், மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்பைக் காப்பாற்றலாம்.
உதாரணமாக, சிறுநீர்ப்பை அல்லது குரல்வளையில் புற்றுநோய் இருந்தால், அந்த உறுப்புகளை வழக்கமாக அறுவை சிகிச்சை மூலம் உடலில் இருந்து அகற்ற வேண்டும். இது முறையே நிரந்தர சிறுநீர் மாற்று ஸ்டோமாக்கள் மற்றும் நிரந்தர சுவாச துளைகளை ஏற்படுத்தும். நோயாளிகள், தங்கள் உடல் உறுப்புகளில் நிரந்தரமான மாற்றங்களுடன் வாழ வேண்டியிருக்கும். மற்றும் உடலில் துளைகள் அல்லது பைகளுடன் வாழ வேண்டும்.
ஆனால் இன்றைய நவீன புற்றுநோய் மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின்றி கதிர்வீச்சு, கீமோதெரபி போன்றவற்றைப் பயன்படுத்தி உறுப்புகளை அகற்றாமலேயே இதுபோன்ற சிறுநீர்ப்பை மற்றும் குரல்வளை புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும்.
பல புற்றுநோய்களில் அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக ரேடியோதெரபி இன்று மிகவும் மேம்பட்டதாகி வருகிறது.
புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்க சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க, ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தில் மற்றொரு இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது" என்கிறார் மருத்துவமனையின் இயக்குநரும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர்.பொ.சசிப்ரியா.
மருத்துவமனையின் 13வது ஆண்டு விழாவில், திருச்சியின் முதல் 24 சேனல் பிராக்கிதெரபி கருவி 28.8.2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திரு. தென்காசி எஸ் ஜவஹர் ஐஏஎஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
விழாவில் திரு. M. பிரதீப் குமார், IAS., மாவட்ட ஆட்சியர்., திருச்சி, திரு.சுஜித் குமார்., IPS., காவல் கண்காணிப்பாளர், திருச்சி, திருமதி. R. அபிராமி, B.Tech. மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி, டாக்டர். ஆர். மோகன், MS.,M.Ch., FICS., தலைவர்., IMA திருச்சி கிளை., திருமதி. K. கமலம் கருப்பையா, சேர்மன். மணிகண்டம் ஒன்றியம், திரு.G.வெள்ளைச்சாமி, தலைவர், நாகமங்கலம் ஊராட்சி மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள், பிற மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாகமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிர்வாக இயக்குநர் டாக்டர்.க.கோவிந்த ராஜ்வர்த்தனன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார், அவரும், பிராக்கிதெரபி பற்றி அறிமுகவுரையாற்றிய டாக்டர்.பொ.சசிப்பிரியாவும் விருந்தினர்களை கவுரவித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் கூட்டத்தில் உரையாற்றினர்.
டாக்டர் கே.எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
"பிராக்கிதெரபி சிகிச்சை முறை நாடு முழுவதும் 232 மையங்களில் பயன்படுத்தப்பட்டாலும், திருச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனைதான் முதன்முதலில் 24 சேனல் பிராக்கிதெரபியை அறிமுகப்படுத்தியுள்ளது" என்கிறார் டாக்டர் பொ.சசிப்ரியா.
"பிராக்கிதெரபி என்பது கதிர்வீச்சை வெளியிடும் இரிடியம் ஐசோடோப்பைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும்.
இந்த ஐசோடோப்பு பொதுவாக எந்த கதிரியக்கமும் வெளியேறாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிராக்கிதெரபி இயந்திரத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும்.
சிகிச்சையின் போது, இரிடியம் ஐசோடோப்பு, இந்த இயந்திரத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த இரிடியம் ஐசோடோப்பானது, இயந்திரத்தின் 24 சேனல்கள் வழியாக, குறிப்பாக கட்டி அமைந்துள்ள இலக்கை அடைந்து உடலில் உள்ள கட்டியை நேரடியாக தாக்குகிறது.
அறுவைசிகிச்சை இல்லாமல் பல புற்றுநோய்களில் முழுமையான சிகிச்சையை அடைவதற்கு இத்தகைய உள் கதிர்வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, கன்னத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, கட்டியின் அளவைக் குறைக்க வெளிப்புற கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். பின்னர் மீதமுள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இது போன்ற சமயங்களில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான சிகிச்சை பெற முடியும் என்றாலும், முக அமைப்பில் மாற்றம் ஏற்படும். மேலும் கழுத்துப் பகுதியில் உள்ள சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும்.
ஆனால் ரேடியேஷன் தெரபியை ப்ராக்கிதெரபி மூலம் எஞ்சிய கட்டியின் மீது நேரடியாக அளிக்கும் போது, அறுவை சிகிச்சை தேவையில்லை, முக அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
உள் கதிர்வீச்சு சிகிச்சையில் பின்வரும் நான்கு வகைகள் உள்ளன:
1. மேற்பரப்பு கதிர்வீச்சு
2. உள் திசு கதிர்வீச்சு
3. உள்குகை கதிர்வீச்சு
4. இன்ட்ராலுமினல் கதிர்வீச்சு
மார்பகம், கருப்பை வாய், வாய் மற்றும் கன்னப்பகுதி, மென்மையான திசுக்கள், புரோஸ்டேட், உணவுக்குழாய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு, இந்த உள் கதிர் வீச்சு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிராக்கிதெரபி சிகிச்சைக்கு, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
குறைந்த அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை (எல்.டி.ஆர்) மற்றும் அதிக அளவு கதிர்வீச்சு சிகிச்சை (எச்.டி.ஆர்) எனப்படும் இரண்டு வகையான ப்ராக்கிதெரபி இயந்திரங்கள் உள்ளன. எல்டிஆர் இயந்திரங்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இந்த எல்.டி.ஆர் இயந்திரங்களுக்கு நீண்ட சிகிச்சை காலம் தேவைப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு அதிக அசௌகரியம் ஏற்பட்டது. மேலும் நோயாளிகள் நீண்ட நேரம் தனிமைப்படுத்தப்பட்டனர்.
எனவே, சமீப காலங்களில், எச்.டி.ஆர் இயந்திரங்கள், சர்வதேச புற்றுநோய் மையங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதுபோன்ற மேம்பட்ட எச்.டி.ஆர் இயந்திரத்தை எங்கள் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துகிறோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இந்த இயந்திரம் மூலம் நோயாளிகள் சிகிச்சையை விரைவாக முடிக்க முடியும். நீண்ட தனிமைப்படுத்தல் அவசியமில்லை" என்கிறார் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். பொ.சசிப்ரியா.
"நாகமங்கலத்தில் உள்ள எங்கள் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.
கடந்த 12 ஆண்டுகளாக புற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
திருச்சி மலைக்கோட்டை முழுவதும் இளஞ்சிவப்பு வணன விளக்கேற்றுவது போன்ற மிகப்பெரிய பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சர்வதேச அளவில் நியமிக்கப்பட்ட மாதமான 'பிங்க் அக்டோபர்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இளஞ்சிவப்பு விளக்குகளுடன், திருச்சி மலைக்கோட்டைய ஹர்ஷமித்ரா மருத்துவமனை மின்ன செய்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் மருத்துவத் துறை மாறிக்கொண்டே இருந்தாலும், சர்வதேச புற்றுநோய் மையங்களுக்கு இணையாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படும் வகையில், சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்பவும், ஹர்ஷமித்ரா மருத்துவமனை நோக்கி வரும் மக்களுக்கு, அவற்றைக் கிடைக்கச் செய்யவும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடுமையாக பாடுபடுகிறது.
எனவே, புற்றுநோய் குறித்து இனி பயப்படத் தேவையில்லை, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மட்டுமே தேவை’’ என்கிறார் டாக்டர்.பொ.சசிப்ரியா.
புற்றுநோயின் எட்டு அறிகுறிகளை அறிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
1. உடலில் எங்காவது ஆறாத புண்
2.உடலில் எங்கிருந்தாவது அசாதாரண இரத்தப்போக்கு
3.மார்பகத்திலோ அல்லது உடலில் வேறு இடத்திலோ கட்டி
4. மரு அல்லது மச்சத்தில் மாற்றம்
5. மலம் அல்லது சிறுநீர் கழிப்பதில் மாற்றம், அஜீரணம் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்
6.குரல் மாற்றம் அல்லது கரகரப்பு
7. தொடர் இருமல் அல்லது இரத்தம் கலந்த சளி
8. காரணம் இல்லாத எடை இழப்பு
இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், மக்கள் உடனடியாக புற்றுநோயியல் நிபுணரைத் தொடர்புகொண்டு தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், இதனால் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முழுமையாக குணப்படுத்த முடியும்.
மேலும் எந்த தொந்தரவும் இல்லாதவர்கள் கூட ஆண்டு தோறும் பரிசோதனைகளை மேற்கொண்டு புற்று நோய் வருவதற்கு முந்தைய நிலையிலேயே கண்டு பிடித்து புற்று நோய் வராமலேயே தடுத்துக்கொள்ளும் வகையில், ஸ்கிரீனிங் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
Monday, June 27, 2022
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட திண்டுகல் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணி துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் கொண்டங்கி கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலக்ஷ்மி ஷண்முக சுந்தரம் , ஆகியோர் முன்னிலையில் திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 14 நபர்களுக்கு திண்டுகல் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.
(திரு பிசினஸ் சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம்.
சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:
இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம்,
விழிப்புணர்வு :
இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்
,
விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:
திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால் நம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல்
கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்:
அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும் படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில் பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது.)
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் படைப்பையில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணி துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர், மற்றும் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலையில் திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 24 நபர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.
(திரு.பிசினஸ் சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை வேலைவாய்ப்பு ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம்.
சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:
இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம்,
விழிப்புணர்வு :
இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்
,
விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:
திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால் நம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல்
கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்:
அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும் படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில் பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது)
Wednesday, February 09, 2022
திருச்சி
திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சி அடுத்துள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மற்றும் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அடுத்துள்ள கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, மேசைகள் பீரோ மற்றும் கற்றல் உபகரணங்கள், வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் பெஸ்கி, மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், பேராசியர்கள் ஜெயக்குமார், ஜெரோம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமாரி, புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கியசுந்தர்,
தமிழ்துறை மாணவர்கள் சந்தோஷ், கஸ்தூரி செபாஸ்டின் மாதேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப், கிறிஸ்துராஜா,செய்திருந்தார்.
Thursday, September 09, 2021
இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பாருக், தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் குடந்தை ரஹ்மத்துல்லாஹ், ஜமயத்துல் அஹ்லில் குராண் வல்ஹாதிஸ் (JAQH) மாவட்ட தலைவர் எம்.பி.முஹம்மது, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் கண்டன உரையில் டெல்லியில் நடைபெற்ற பெண் காவலர் சபியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் கற்பழிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்க வேண்டும் இந்த வழக்கை உரிய முறையில விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை வழியுருத்தினர்
மேலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பத்திரிகையாளரை சந்தித்தது உண்டா பாஜக ஒன்றிய அரசு பதவியேற்றதில் இருந்து இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது இந்தியவின் சுதந்திர போரட்டத்திற்க்கு முக்கிய பங்கு வகித்தது முஸ்லீம்கள் என்பதை மறந்துவிட்டார்கள் இந்திய தாய்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் பாஜக ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பினால் தான் முடியும் என கண்ட ஆர்பட்டத்தில் பேசினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்.பகுதி செயலாளர்.
ரஃபயுதீன், கமால், நாசர், பாஷா, மகபூப் பாஷா, முகமது ஜாகீர், ராஜாமுகமது, இஸ்லாமிய அழைப்பாளர். ஷாகுல் ஹமீது. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் கலீலுர் ரஹ்மான் நன்றி கூறினார்
Tuesday, September 07, 2021
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
Sunday, March 08, 2020
திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மகளிர் தின விழாவை கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.
திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் பட்டுவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி துணை பேராசிரியர்கள் ரேவதி, கீர்த்தனா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு முதியவர்களுடன் கலந்துரையாடி முதியவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Friday, February 28, 2020
Thursday, February 27, 2020
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
Wednesday, February 26, 2020
( தற்போது இவர் ELFIN நிறுவனத்தில் உள்ள ஒரு vvip இடம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்களது வட்டாரங்கள் கூறிவருகின்றது)
இனியும் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம் இனி எங்கள் உறுப்பினர்கள் யார் மீதாவது பொய்வழக்கு பதிந்தால் , டிஐஜி,எஸ்பி,டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர், எஸ்ஐ நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நாங்கள் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
நீங்கள் இதற்காகத்தான் இந்தப் பணிக்கு வந்தீர்களா. உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு நல்லதை கற்றுத் தரவில்லையா ? அடுத்தவர்களை அடித்து வாழ்பவர்கள் .
நாங்கள் அறவழியில் செல்வதற்காக தான் அறம் மக்கள் நல சங்கம் தொடங்கினோம் இதேபோல் பொய்வழக்கு பதிந்தால் ... எங்கள் மக்கள் அமைதியான அவர்கள் நல்லவர்கள் அவர்கள் போராட முடிவெடுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எதற்கும் துணிந்து விட்டேன். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக எனது உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேன் என எல்பின் உறுப்பினர்களை கவரும் விதமாகவும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். நீங்களும் வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் உங்களையும் வாழ வைக்கிறேன் என்று காவல்துறையினருக்கு லஞ்சம் தருவதாகவும் கூறியுள்ளார். இனியும் பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிடுங்கள் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எல்பின் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது. 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது. நாங்கள் மக்களை செல்கிறோம். கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது. ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
Tuesday, February 25, 2020
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
Monday, February 24, 2020
திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு
திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்,தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்
திருச்சி, கரூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும்,
ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது,உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,
தான் தி.மு.க வில் இணைந்தது முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றியது வரையிலான நினைவுகளை பகிரிந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.அதில்,மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு
பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.அதனால் தான் தற்போது முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.
கட்சிக்குள் ஜாதியை பார்க்காதீர்கள்.கட்சி வளர்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம்.சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
நான் மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட செயலாளராக கட்சிகாரர்கள் என்னை அங்கீகரிக்கவே 8 ஆண்டுகள் ஆனது.
தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த பின்பு ஏன் ம.தி.மு.க விற்கு செல்லவில்லை என பலர் கேட்டார்கள்.அப்போதே கருணாநிதி,அவர் மகன்,அவர் பேரன் என யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக தான் இருப்போம் என கூறினேன்.தற்போது அது உண்மையாகி உள்ளது என கூறினார்.
Sunday, February 23, 2020
புதுகை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில்
....................................................................................
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...