Showing posts with label 9443086297. Show all posts
Showing posts with label 9443086297. Show all posts

Friday, September 29, 2023

On Friday, September 29, 2023 by Tamilnewstv in ,    

 


திருச்சி உழவர் சந்தை பகுதியில்  தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு கோரிக்கைகளை வரிவொருத்தி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியிலே தேவேந்திர வெளாளர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரு நபர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுமற்றும் சுமார் 75 மாவட்டசெயலாளர் ஒருவர் கூட தேவேந்திர வெளாளர்கள்சமுதாயத்தை சேர்ந்தவர்கள்ஒருவர் கூட திமுக மாவட்ட செயலாளர் ஆகஇல்லை மற்றும் 21 மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தேவேந்திர குல வெளாளாளர்களுக்கு வழங்கவில்லை மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் .மு. கண்ணுச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்துக் கட்சி தேவேந்திர குல வெளnளாளர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் வழக்கறிஞர் முத்துச்சாமி, சேட்டு, செல்வராஜ், ராஜமாணிக்கம், ராணி, ஆறுமுகம், சிற்றரசு, மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள் 

Monday, June 27, 2022

On Monday, June 27, 2022 by Tamilnewstv in ,    



பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா  கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில்   தனியார் துறை வேலைவாய்ப்பு  மூலம் தமிழக அரசு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட திண்டுகல் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின்  /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு  பணி  துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் கொண்டங்கி கீரனூர் ஊராட்சி  மன்ற தலைவர் விஜயலக்ஷ்மி ஷண்முக சுந்தரம் ,  ஆகியோர் முன்னிலையில்  திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 14 நபர்களுக்கு திண்டுகல்  மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.


 (திரு பிசினஸ்  சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும்  உள்ள  கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை   வாய்ப்பு ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம். 


சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:


 இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம், 


விழிப்புணர்வு :


இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி  ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்


விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:             

    

திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால்  நம் விவசாயிகள்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல் 


கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்: 


அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும்  படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில்  பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது.)

On Monday, June 27, 2022 by Tamilnewstv in ,    

பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  படைப்பையில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு  மூலம் தமிழக அரசு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின்  /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு  பணி  துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் ஒரத்தூர் ஊராட்சி  மன்ற தலைவர் வள்ளி சுந்தர், மற்றும் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,  ஆகியோர் முன்னிலையில்  திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 24 நபர்களுக்கு காஞ்சிபுரம்  மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.

(திரு.பிசினஸ்  சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும்  உள்ள  கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை வேலைவாய்ப்பு    ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம். 


சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:


 இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம், 


விழிப்புணர்வு :


இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி  ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்


விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:             

    

திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால்  நம் விவசாயிகள்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல் 


கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்: 

அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும்  படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில்  பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது)

Wednesday, February 09, 2022

On Wednesday, February 09, 2022 by Tamilnewstv in ,    

 திருச்சி 


திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை,  தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை  இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது. 

திருச்சி அடுத்துள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு   மற்றும் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அடுத்துள்ள கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, மேசைகள் பீரோ மற்றும் கற்றல்  உபகரணங்கள்,  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் பெஸ்கி, மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், பேராசியர்கள் ஜெயக்குமார், ஜெரோம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமாரி,  புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கியசுந்தர்,

தமிழ்துறை மாணவர்கள்  சந்தோஷ், கஸ்தூரி செபாஸ்டின் மாதேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப்,  கிறிஸ்துராஜா,செய்திருந்தார்.



Saturday, December 11, 2021

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது

ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Friday, August 06, 2021

On Friday, August 06, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் துவக்கிய அப்பல்லோ மருத்துவமனை குழுமம்


திருச்சி, தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி அவர்களால், அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக வியாழன் அன்று (05.08.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி 30,000 தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் திரு. கே. என். நேரு மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எஸ் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.


அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அப்போலோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.  இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார்.            திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், மற்றும் மருத்துவமனை துணை பொது மேலாளர்  சங்கீத் உடனிருந்தனர்.

Tuesday, June 01, 2021

On Tuesday, June 01, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி 



தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் முழு வீச்சோடு செயல்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் தடுப்பு ஊசியின்  தேவையை வலியுறுத்தும் பிரச்சாரம் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள், இலவசமாக வழங்குதல் சாலையோரம் மற்றும் தேவையுடையவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் மூலம் உதவி செய்தல், கொரோனாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினரை பயன்படுத்துதல், கொரோனாவால்  பெற்றோர்களை இழந்த குழந்தை களுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம், அவசரத் தேவைக்கான மருத்துவ எண்களை கொடுத்து உதவுதல், மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான பணிகள் என ஜமால் முஹம்மது உதவி மையத்தின் மூலம் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி உதவி மையத்தினை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால், உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
On Tuesday, June 01, 2021 by Tamilnewstv in ,    

 மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர்   ஏ.சீனிவாசன் பேட்டி 

                                     

தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஏ.சீனிவாசன் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின்  தந்தை தாளாளர் ஏ.சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
                                        


தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 360 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது
.
                                  

மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் நோய் தொற்று சிகிச்சைக்காக பதினைந்து படுக்கைகளும் மீதமுள்ள 135 படுக்கைகள் லேசான மற்றும் மிதமான கொரோனா ம் மற்றும் புற்று நோயாளிகளுக்கும் மீதமுள்ள 210 படுக்கைகள் பிற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
                                 


இதுவரை 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 40 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களுக்கு அவசர தேவைக்காக மருத்துவ கல்லூரியின் ஆம்புலன்ஸ் சேவை தயார்நிலையில் உள்ளது எனவே தொகுதி மக்கள் அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் மற்றவர்களுக்கு ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்ய தயாராக இருக்கிறது என்றும் இதுவரை 125 க்கும் அதிகமானோர்இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் Prof.Dr.ராஜேஷ் M.S, Associate Prof.Dr.சங்கர் M.d, மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார் மற்றும் மேற்கொள்ளும் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

Monday, December 07, 2020

On Monday, December 07, 2020 by Tamilnewstv in ,    

 திருச்சி 


2021 சட்டமன்ற தேர்தலுக்காக, 
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம்,  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.


திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்று வரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குமு தலைவரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி N.சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்  அடங்கிய குழுவினர் பங்கேற்று மனுக்களை பெற்று வருகின்றனர்.. இந்த கூட்டம் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயி சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன , ஓட்டுனர் உரிமையாளர்கள் ,கட்டிட கலைஞர்கள்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  தங்களது  கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும்  நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில்  150க்கும் மேற்பட்டோர்  தங்களது கருத்துக்கள் அடங்கிய கடிதங்களை போட்டனர்.. இந்நிகழ்ச்சியில்
தெற்கு மாவட்ட பெறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன்,
சட்டமன்ற உறுப்பினர்கள்  சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் ,மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ,ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
On Monday, December 07, 2020 by Tamilnewstv in ,    

 திருச்சி-07.12.20


விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்



மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக அவர்களை  காவல் துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தன்னுடைய விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களையும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்காததை கண்டித்தும் தங்களை தடுக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறை அனுமதி அளிக்கவில்லையென்றால் அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வேன் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பேட்டி: அய்யாக்கண்ணு, மாநில தலைவர்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
             

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.


             
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறையில் திமுக வின் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள்
                 

   கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு கமூக நல அமைப்பினர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுக வின் சார்பில் சீகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் அன்பில்.மகேஸ்பொய்யாமொழி அரிசி, காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in , ,    
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1425 பேரை சிறப்பு ரயில் மூலம் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்த 1009 தொழிலாளர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றிய 416 தொழிலாளர்கள் என 1425 தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்தின் மோதிகாரி ரயில்வே நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in ,    
ரூ.20 லட்சம் கோடி உதவியில் 85 கோடி விவசாயிகளுக்கு எந்த உதவியும் (பலனும்) கிடையாது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு
                

     இந்திய மக்கள்தொகையில் சுமார் 130 கோடியில் விவசாயிகள் 85 கோடி பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா ஊராடங்கள் பாதிக்கப்பட்டது கொஞ்சம், நஞ்சமில்ல, வேலை இல்லை, கூலி, சம்பளம் கிடைக்க இல்லை என்பது நிதர்சன உண்மை. அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான்.
     ஆனால், கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைவிவசாயிகள் வாழைதார்களை வெளியே கொண்டுசென்று விற்பனை செய்ய முடியவில்லை. ஏக்கருக்கு 1 லட்சம் முதல் 1.5 இலட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்து உள்ளார்கள். அத்துடன் சூறாவளி காற்றினால் வாழை மரம் எல்லாம் முறிந்து விழுந்துவிட்டது.
     வெற்றிலை பயிர் விவசாயம் செய்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து வெற்றிலை பறித்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தில் உள்ளார்கள். இதனால் வெற்றிலை எல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது.
      பூக்கள் வாங்க ஆட்கள் இல்லாததாலும், விற்பனை கடைகள் இல்லாததாலும், பூக்களை செடியில் பறிக்க ஆட்கள் இல்லாததாலும் பூக்கள் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து கொட்டிவிட்டது.
      தர்பூசணி, முலாம், திராட்சை பழங்களை கொண்டு சென்று விற்க முடியாததால் வயலிலேயே அழுகி அழிந்துவிட்டது.
      எலுமிச்சை பழம் விற்க வெளியே கொண்டு செல்ல முடியாமல் மரத்திலேயே பழுத்து கொட்டி அழுவிவிட்டது.
      நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் நிலையோ மிக மிக பரிதாபம், வெளி சந்தையில் நெல்லை விற்க முடியாததால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல்லை விற்றத்தில் 40 கிலோ நெல் மூட்டை ஒன்றிக்கு ரூ.60 முதல் 80 வரை கமிஷன் எடுத்ததால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு கொடுத்த கமிஷன்(லஞ்சம்) தொகை சுமார் ரூ.281 கோடி, விவசாயிகள் வாழ்வதா..? சாவதா..?  DPC - நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்த இலட்ச கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைத்து அழிந்துவிட்டது.
     முதலீடு செய்த பணம்  எல்லாம் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிட்டது.
     இதனால் மத்திய அரசு ரூ.20 இலட்சம் கோடிகள் உதவித்தொகையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000/- கொடுக்கும் என்று எதிர்பாத்தோம், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.
     கொரோனா பாதித்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விவசாயிகள் 63 லட்சம் பேர் வங்கிகளுக்கு சென்று ரூ.86,600 கோடிகள் கடன் பெற்றார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்களே நியாயமா..?
     ஜூஸ் கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகள் ஜூஸ் கடைகள் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் கரும்பெல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது. விசேஷங்கள் இல்லாததால் வாழை இலைகள் கிழிந்தும், காய்ந்ததும் விட்டது. வெள்ளரிக்காய் பறித்து விற்க முடியாமல் அழிந்து வீணாகி விட்டது.
     தொழில்சாலைகள் இயங்காததால் மரவள்ளி(குச்சிவள்ளி) கிழங்குகள் வயளிலேயே அழிந்துவிட்டது.
     மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் இல்லாததால், மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திலும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளத்தில் நஷ்டஈடும், கொரோனா தொற்றில் அழிவதைவிட, அதிகமாக விவசாயிகள் கடனில் அழிந்துவிடுவார்கள்,போராட அனுமதி கொடுங்கள் என்று நீதி மன்றத்தில் நீதி கேட்க உள்ளோம் என்று இவ்வாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி துறையூர் கோவிந்தபுரம் பகுதி சார்ந்த மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு சேர்த்து நபர்களை நீக்கம் செய்து அளந்து கொடுத்தல் சம்பந்தமாக கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்


துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்

Sunday, March 08, 2020

On Sunday, March 08, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 3ம் ஆண்டு  துவக்க விழா மற்றும் மகளிர் தின விழாவை கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.

திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் பட்டுவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி துணை பேராசிரியர்கள்  ரேவதி, கீர்த்தனா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு  முதியவர்களுடன் கலந்துரையாடி முதியவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர்  பகிர்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

+2 தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று 2ம் தேதி ஆரம்பித்து
வரும் மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வில் 250 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள்
17823 பேர், மாணவர்கள் 14,482 பேர் என மொத்தம் 32,305 பேர் தேர்வெழுதுகிறார்கள்.
இதற்காக 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதே போல்
11 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 4ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை மாணவிகள் 18,049 பேர், மாணவர்கள் 15,798 பேர் என
மொத்தம் 33,847 பேர் எழுதுகின்றனர். இதற்காக 126 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. 11 ம் வகுப்பு/12 ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 4 தேர்வு மையங்கள், பழைய பாடத்திட்டத்தில்
பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 2 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில்
போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.
10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச்
14ம் தேதி ஆரம்பித்து மார்ச் 29ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை 457 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 17,886 பேர் ,
மாணவர்கள் 17,798 பேர் என மொத்தம் 35,684 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக 164
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 5 தேர்வு மையங்களும், இத்துடன் சிறைக்கைதிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிட திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு தேர்வு
மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று +2 தேர்வு நடைபெறும் புனித ஜான் வெஸ்டரி பள்ளியில் உள்ள தேர்வு  மையத்தை  மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையட்டார்.

பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்


Saturday, February 29, 2020

On Saturday, February 29, 2020 by Tamilnewstv in ,    
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -  லோக் தந்திரிக்  ஜனதா தளம் தலைவர் ராஜகோபால்.
                   

மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லோக் தந்திரிக் ஜனதா  தளம் கட்சியின் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில்
அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால். மாநில பொதுச்செயலாளர்கள் ராஜசேகரன், ஹேமநாதன், வையாபுரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
                  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் ராஜகோபால் தமிழக அரசு NPR, NRC எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று தார்மீக முறையில் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                
   
திருச்சியில் 
அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள்
                 

சட்டவிரோதமாக இயங்கும்  குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இன் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் 
உரிமம் பெறாத 
132ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து இன்று காலை திருச்சி மாவட்டத்தில் 
அனுமதி பெறாமல் இயங்கிய 23 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு 
அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 
23குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.
திருச்சி வயலூர் சாலையில் செயல்பட்டு வரும் பெஸ்ட் ஆக்குவா நாளைக்கு நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பேட்டி: ஹேமநாதன்
செயலாளர் 
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.

Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இச்சங்கம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திரங்களுக்கு வாடகை குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சங்க உறுப்பினர்கள், காண்ட்ராக்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர்கள் எந்திரங்களுகாண கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 


இந்த குறையை தீர்க்கும் வகையில் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் இனி குறைந்த வாடகைக்கு ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என சங்கத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 900 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திர தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்றுவதற்காகவும், உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் இந்த வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
 எனவே ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

பேட்டி: மனோகரன். திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர் சங்க ஆலோசகர்.