Showing posts with label திருச்சி சபரிநாதன். Show all posts
Showing posts with label திருச்சி சபரிநாதன். Show all posts

Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
             

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.


             
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.
On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறையில் திமுக வின் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள்
                 

   கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு கமூக நல அமைப்பினர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுக வின் சார்பில் சீகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் அன்பில்.மகேஸ்பொய்யாமொழி அரிசி, காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Sunday, February 02, 2020

On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ELFIN  திட்டத்தால் போக்குவரத்து பாதிப்பா

திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடக்கும் தனியார் நிறுவனம் எல்பின் நிகழ்ச்சிக்கு திருச்சி கலையரங்க வளாகத்தில் பார்க்கிங் அனுமதி அளித்தது யார்....
முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்றது

அதற்கு வாகன நிறுத்த இடம் இல்லை அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தி உள்ளார்கள்.

எல்பின் கவர்ச்சி திட்டங்கள்

*ELFIN E COM PRIVATE LIMITED*


*HIGHWAY  ECM*
Rs84,000
(PV 7)
✓10000 Members  only Eligible•••
✓1000 Members only mega price •••

✓First price
 100 Members 600 sqrFit home(House)•••

✓Second price
10 Members car•••

✓Third price 100 Members Plot•••

✓Fourth price 100 Members 5 பவுன் GoldChain•••

✓Fifth price  100 members Royal Enfield•••

✓Sixth price 100 members 3 பவுன் gold Chain•••

✓Seventh price 490 members 65 inches LED TV , DVD Player, Home theater•••

•••Balance 9000 Members-ku
LED TV....FREE••••
*****************************
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மாவட்ட நலப்பணி நிதி குழு கையூட்டு பெறப்பட்டதா மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

Sunday, March 24, 2019

On Sunday, March 24, 2019 by Tamilnewstv in ,    
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருச்சி  சாருபாலா தொண்டைமான் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

திருச்சி பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர் வீராங்கனை கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி வயலூரில் உள்ள மணிமுத்து மண்டபத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்,
திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் கழக அமைப்புச் செயலாளரும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் சீனிவாசன் கூட்டணி கட்சியான SDPI திருச்சி மாவட்ட தலைவர்  ஹஸ்ஸான் கழக விவசாய அணி இணைச்செயலாளர் 
செல்வகுமார் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கேசவன் அவர்கஅந்தநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர் வாசு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.





Saturday, March 23, 2019

On Saturday, March 23, 2019 by Tamilnewstv in ,    
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்


  திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.
On Saturday, March 23, 2019 by Tamilnewstv in ,    
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வெங்காய தரகு மண்டி வியாபார சங்க தலைவர் வெள்ளையப்பனிடம் ஆதரவு கோரினார்.


திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Friday, March 22, 2019

On Friday, March 22, 2019 by Tamilnewstv in ,    



திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வரகனேரி  அல்முஹம்மதியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களிமும் அவைத் தலைவர் ஹாஜி அல்லாஹ் மஸ்ஜித் இமாம் பஸ்ஸின் தாவூது ஆகியோரிடம் ஆதரவு கோரினார்

.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் sdpi சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைவர் அரசன் செயலாளர் ரபீக் முபாரக் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா வழக்கறிஞர் அணி இணைச் செயலர் கோபி செழியன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் இலக்கிய அணி செயலாளர் வரதராஜன் பொறியாளர் அணி செயலர் விக்னேஷ் உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Monday, November 26, 2018

On Monday, November 26, 2018 by Tamilnewstv in    
திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி




திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Wednesday, September 19, 2018

On Wednesday, September 19, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி – 18.09.18


திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.
முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.

தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

Tuesday, September 18, 2018

On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in ,    
திமுக சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வைக்கிற இடத்தில் பணத்தை வைத்து விட்டார். கொள்ளையடித்த பணத்தை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறார். அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லை வழியில்; பயமில்லை என சொல்கிறார் – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு.


அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. பருப்பு மற்றும் முட்டை கொள்முதல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர், பொதுப்பணித்துறை மற்றும் நீர்நிலைகள் குடிமராமத்து செய்தல் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.மேலும், குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழக காவல்துறை தி.மு.க-வினர் மீது மட்டும் பொய் வழக்குப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களே தவிர, அ.தி.மு.க-வினர் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

தேர்தலின்போது, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தற்காக என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்தார்கள் திருச்சி மாநகர காவல்துறையினர். அந்த வழக்கில் இருந்து நாம் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து விடுதலை ஆகியுள்ளோம் என்றும் அண்ணா பிறந்தநாள் அன்று, நமக்கு ஒதுக்கிய நேரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக வந்து மாலை அணிவித்தார்கள். ஆனால், போலீஸார் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர்மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தவறுசெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 பி.ஜே.பி-யுடன் தி.மு.க ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர், தி.மு.க-வுக்கு உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கெடுப்பதற்காகவே இப்படிப் பேசிவருகிறார். தி.மு.க எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாவலனாக இருக்கும். ஒருபோதும் சிறுபான்மை மக்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தம்பிதுரை, மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பி.ஜே.பி-யைப் பழிவாங்குவதற்காக இப்படிப் பேசிவருகிறார். அவர், பலமுறை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விமானம் மற்றும் விமான நிலையங்களில் சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க-வுக்கும் தம்பிதுரைக்கும் தொடர்பு உள்ளது என்று கூற முடியுமா? என்றும்

 பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச் ராஜா, தொடர்ந்து வரம்பு மீறிப் பேசிவருகிறார். அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார் மேலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் திமுக தொண்டர்கள்
 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Wednesday, September 12, 2018

On Wednesday, September 12, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் இந்து முன்னணி மாநில


பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான கட்டுபாடுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.


 விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள பட்டி, தொட்டி எங்கும்  கொண்டாடக்கூடிய மிகச் சிறப்பான ஒரு விழா. இந்த விழாவிற்கு இந்த வருஷம் அரசாங்கம் இதுவரை இல்லாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மின்சார துறையில் அனுமதி பெற வேண்டும். இட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உடனடியாக இவைகளை பெற வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய நேரிடும். இந்த விழாவை சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொண்டாடுகின்றனர். அதனால் இந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அதனால் நாளை ( இன்று) காலை சென்னை சேப்பாக்கத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். நாளை (இன்று) மாலைக்குள் தமிழக அரசு ஒரு சரியான முடிவை இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை என்றால். நாளை மறுநாள் புதன்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ளது. இந்த விழாவை கொண்டாட எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி அவற்றை போராடி நிச்சயமாக வெற்றிகரமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம். விநாயகருக்கு தீங்கு செய்பவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது. அதனால இந்த அரசாங்கமானது இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இவ்வளவு தடைகள் போடுவதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். கடந்த ஆண்டு எவ்வாறு இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது, அதேபோல இந்த ஆண்டும் நடைபெற தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கூறினார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து, விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலம் பகுதியில் மேடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். அப்போது இந்து முன்னணி மாநகர நிர்வாகிகள் ஆறுமுகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Thursday, May 17, 2018

On Thursday, May 17, 2018 by Tamilnewstv in ,    
மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் இன்று மதியம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் டோர் மெட்டல் டிடெக்டர் கருவியை தாண்டி செல்லும் போது பீப் சத்தம் ஒலித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் (35) என்பவர் ரூ. 3.71 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதே போல் இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த விருத்தாசலம் அன்பரசன் (29) என்பவர் ரூ.3.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த போது சிக்கினார்.

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, April 30, 2018

On Monday, April 30, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்





சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால்  அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக  கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்

மேலும் சென்னை செலக்ஸ் சார்பாக,இதனால் வரை 11 ஆண்டுகள் நடை பெற்ற கண்  சிகிச்சை முகாமில் 4250 ற்கும் மேற்பட்டோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூல மாக சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, April 26, 2018

On Thursday, April 26, 2018 by Tamilnewstv in ,    

நிர்மாலா தேவி விசாரணை தொடர்பாக பெண் நீதிபதி தலமையிலான  சிறப்பு விசாரணை குழு  நியமிக்கப்பட வேண்டும் – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

தஞ்சையில் நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த திருமாளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் நான்கு  கட்ட போரட்டங்களை பொதுமக்களுடன் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் ஆனால் மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. ஆகவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம்,

காவேரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக கண்காணிப்பு குழு அல்லது மேற்பார்வை குழு  இதில் எதாவது ஒன்று தான் மத்திய அரசு அமைக்கும் ஆனால் தொடர் போராட்டங்கள் மூலமாக சட்ட ரீதியாக பெற வேண்டிய உரிமையை பெறுவோம்.

நிர்மாலா தேவி தொடர்பாக இரு வேறு விசாரனண என்பது சட்டத்துக்கு புறம்பானது பெண் நீதி தலமையிலான சிறப்பு  புலணாய்வு அமைக்க வேண்டும் அதில் சரிபாதியாக பெண் உறுப்பினர் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

காவேரி போரட்டங்களை பொய் வழக்குகள் மூலம் தமிழக அரசு நசுக்க முயற்ச்சிக்கிறது,

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் கூறினார்.

Wednesday, April 25, 2018

On Wednesday, April 25, 2018 by Tamilnewstv in ,    
ஆசிஃபா படுகொலைக்கு நீதிகேட்டும், படுகொலையை கண்டித்தும் திருச்சியில் ஆர்ப்பாட்டம்


ஆசிஃபா படுகொலைக்கு நீதி கேட்டு, திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.


அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.


நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.


ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.


குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என

இவ்வாறு அவர் கூறினார்.
On Wednesday, April 25, 2018 by Tamilnewstv in ,    
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக

திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் டாக்டர் . எம்.கே முருகன் அவர்கள் திறந்து வைத்தார்



கோடைவெயிலின் தாக்க த்தால் மக்கள் மிகவும் மக்கள்அவதிக்குள்ளாவார்கள் கோடை வெயிலினி னால் தண்ணீர் மற்றும் நீர்சத்து மிக்க உணவு களை உ ண்பதால் உடலை வெப்பத்தாக்குதளிலிருந்து காக்க முடியும் என்பதால் வருடா வருடம் கோடை வெயில் காலம் முடியும் வரை தெய்வத்திரு. தாரா நல்லூர் கண்ணன் அவர்களின் பெயரில் உள்ள அறக்கட்டளை சார்பாக அவரது மகனுமான தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் திறந்து வைப்பார் அதே போன்று இந்த வருடம் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது


மேலும் தண்ணீர் பந்தலில் தர்பூசணி, கம்பங்கூல், நீர்மோர் நீர்சத்து மிக்க பொருட்கள் இலவசமாக மக்களுக்கு விணை யோகிக்கப்படும் என தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் தெரிவித்தார்

Thursday, March 29, 2018

On Thursday, March 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
On Thursday, March 29, 2018 by Tamilnewstv in ,    
 திருச்சி 29.03.18

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி..

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் CBl மெத்தனம் காட்டுகிறது திருச்சி தெளகித் சுல்தானா வழக்கு சங்கர சுப்பு வழக்கறிஞர் மகன் கொலையில் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என CBl மெத்தனப் போக்கை கண்டித்து பேட்டியளித்த எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கடைசி நாள் இன்று . உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு இன்றோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தலை கருத்தில்  கொண்டே மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.

தமிழக அரசு மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தகவல்கள்  வெளிவருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்.

ஆனால் அதுவும் கூட நமக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேறு எந்த ஒரு அமைப்பை உருவாக்கினாலும், அது நமக்கு உரிய நீரை பெற்றுத்தரக் கூடிய அமைப்பாக இருக்காது.

காவிரி நடுவர் மன்றம் அறிவித்த இறுதி தீர்ப்பில் சட்டப்படி Creates Scheme என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு அந்த Scheme என்றால் என்ன  என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் காலம் தாழ்த்துகிற சதி முயற்சி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி நீர் தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லை என்றால் எந்த உத்திரவாதமும் இல்லை.

காத்திருப்பதால் எந்த நீதியை அளிக்காது எனவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகு கடுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க ஏதுவாக இருக்கும். 

நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்யப் போவதாக சொல்வது சரியான நிலைபாடு அல்ல, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது. அல்லது இதுவும் ஒரு நாடகம் என்று மக்கள் கருத நேரிடும். அதை தவிர்த்து பதவி விலகுவது நேர்மையான, நியாமான அணுகு முறையாக இருக்கும். செய்யவும் முடியும்.

50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கின்றார்கள் என்றால், மிகப் பெரிய அரசியலமைப்பு சட்ட நெருக்கடியாக அது மாறும். சர்வதேச அரசியலின் கவனத்தை அது ஈர்க்கும். ஒரு தீர்வு எட்டும். இதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தை இன்னும் 10 அல்லது 25 ஆண்டுகளில் குடிநீருக்கு அலையும், தவிக்கும் ஒரு மாநிலமாக மாற்றுவர்கள். அதற்கான அடித்தளம் தான், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், போன்ற பணிகள் எல்லாம்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரால் ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்தையே அவர்கள் வேட்டையாட போகிறார்கள். புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த கடற்கரை பகுதியும், ஹைட்ரோ கார்பன் இருப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள். அதை பெட்ரோலியம் சோன் அல்லது கெமிக்கல் சோன் என்று அறிவிக்கப் போகிறார்கள். இதனால் தமிழக நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அங்கிருந்து மக்கள் புலம்பெயர, இடம் பெயர வேண்டிய நெருக்கடி உருவாகும். இது மிகவும் ஆபத்தானது தமிழகத்தை திட்டமிட்டே பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறதோ என்ற கவலை இருக்கிறது. 

31 ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்தை முற்றாக கைவிட வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது ஆதரவும் அளிக்கிறது

கூட்டுறவு சங்க தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சி ஆதிக்கம் செய்யும் ஒரு தேர்தல், தலித்துக்களோ, பெண்களோ பங்கேற்க முடியாத, இட ஒதுக்கீடு இல்லாத தேர்தல், அதற்கு தேர்தல் என்று அறிவிக்காமல் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களையே நியமித்துவிட்டு போகலாம்.