Wednesday, September 12, 2018

On Wednesday, September 12, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் இந்து முன்னணி மாநில


பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான கட்டுபாடுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.


 விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள பட்டி, தொட்டி எங்கும்  கொண்டாடக்கூடிய மிகச் சிறப்பான ஒரு விழா. இந்த விழாவிற்கு இந்த வருஷம் அரசாங்கம் இதுவரை இல்லாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மின்சார துறையில் அனுமதி பெற வேண்டும். இட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உடனடியாக இவைகளை பெற வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய நேரிடும். இந்த விழாவை சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கொண்டாடுகின்றனர். அதனால் இந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அதனால் நாளை ( இன்று) காலை சென்னை சேப்பாக்கத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். நாளை (இன்று) மாலைக்குள் தமிழக அரசு ஒரு சரியான முடிவை இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை என்றால். நாளை மறுநாள் புதன்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ளது. இந்த விழாவை கொண்டாட எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி அவற்றை போராடி நிச்சயமாக வெற்றிகரமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம். விநாயகருக்கு தீங்கு செய்பவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது. அதனால இந்த அரசாங்கமானது இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இவ்வளவு தடைகள் போடுவதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். கடந்த ஆண்டு எவ்வாறு இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது, அதேபோல இந்த ஆண்டும் நடைபெற தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கூறினார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து, விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலம் பகுதியில் மேடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். அப்போது இந்து முன்னணி மாநகர நிர்வாகிகள் ஆறுமுகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

0 comments: