Wednesday, September 12, 2018
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment