Wednesday, September 12, 2018
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment