Wednesday, September 12, 2018
விநாயகர் சதுர்த்திக்காக ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார்ää மாணிக்க விநாயகருக்காக 150 கிலோவில் தயாரிக்கப்படும் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்ää மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் வியாழக்கிழமை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நாளை காலை (புதன் கிழமை) தொடங்குகிறது. இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கொழுக்கட்டை தயாரிக்க
இதில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய்,பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்,நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
இந்த விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment