Thursday, March 29, 2018

On Thursday, March 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

0 comments: