Showing posts with label Trichy Sabari inathan. Show all posts
Showing posts with label Trichy Sabari inathan. Show all posts

Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி துறையூர் கோவிந்தபுரம் பகுதி சார்ந்த மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு சேர்த்து நபர்களை நீக்கம் செய்து அளந்து கொடுத்தல் சம்பந்தமாக கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்


துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்

Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (சனிக்கிழமை) 'தேசம் காப்போம் பேரணி' திருச்சியில் நடைபெற்றது

 எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, எடமலைப்பட்டி புதூர் வழியாக கிராப்பட்டி வந்தடைந்தது. பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.


அதுமட்டுமின்றி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏ-விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணிசுமார் 50 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
THE TAMIL NADU
PROTECTION OF INTERESTS OF DEPOSITORS
(IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997

(TAMIL NADU ACT 44 OF 1997)
(As modified upto 31st October 2018)
CHAPTER -1

1. Short title and commencement:-
(1) This act may be called the Tamil Nadu Protection of Interests of
Depositors (in Financial Establishments) Act, 1997.


(2) It shall come into force at once.
2. Definitions:- In this Act, unless the context otherwise requires:-
(1) “Competent authority” means the authority appointed under section 4;
(2) “deposit” means the deposit of money either in one lump sum or by
instalments made with the Financial Establishment for a fixed period, for
interest or for return in any kind or for any service;
(3) “Financial Establishment” means an individual, an association of
individuals, a firm or a company registered under the companies Act, 1956
(Central Act 1 of 1956) carrying on the business of receiving deposits under any
scheme or arrangement or in any other manner but does not include a
corporation or a co-operative society owned or controlled by any State
Government: or the Central Government, or a banking company as defined in
section 5(c) of the Banking Regulation Act 1949 (Central Act X of 1949).
(4) “Government” means the State Government.
CHAPTER – II
3. Attachment of properties on default of return of deposits:
Notwithstanding anything contained in any other law for the time being in
force,

மேலும் காண்போம்

Sunday, February 02, 2020

On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள் மோசடி காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை  அறிவிப்பு*

திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில்  ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது  என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார்  ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது

 இந்நிலையில் தன்னிடம் பணம் வசூல் செய்த ELFIN நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர்  குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் அந்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்சி அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது காவல்துறை
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Thursday, January 02, 2020

On Thursday, January 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது

திருச்சி மாவட்டத்தில்
14ஒன்றியங்களில்  நடைபெற்ற  உள்ளாட்சி
தேர்தல் வாக்குகளை வாக்கு எண்ணும்
மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
 
திருச்சி மாவட்டத்தில்
14ஊராட்சி ஒன்றியங்களில்
27ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவு
அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய
6ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து,
2ம்கட்ட வாக்குப்பதிவு
லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை,தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய
8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு  நடைபெற்றது. இதனை தொடர்ந்து
இன்று வாக்கு எண்ணும் பணிகள் காலை 8மணிக்கு வாக்கு பெட்டி வைத்திருந்த

புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியிலும்,

லால்குடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குமூளுரில் உள்ள
வேளாண் மை பொறியியல் கல்லூரியிலும்,

மண்ணச்சநல்லூர்
ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கொணலையில் உள்ள
சூர்யா பொறியியல் கல்லூரியிலும்,

முசிறி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தொட்டியத்தில் உள்ள
அறிஞர் அண்ணா கலை  அறிவியல் கல்லூரியிலும்,

தொட்டியம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை முசிறி அடுத்துள்ள
தோளூர்பட்டி
வெற்றி விநாயக பொறியியல் கல்லூரியிலும்,

தா.பேட்டை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தா.பேட்டையில் உள்ள
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
துறையூர் அடுத்துள்ள கோட்டபாளையத்தில் உள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,

துறையூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கரட்டாம்பட்டியில் உள்ள
ஜெயராம் பொறியியல் கல்லூரியிலும்,

திருவரம்பூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குண்டூரில் உள்ள
எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியிலும்,

அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
பேரூரில் உள்ள
காவேரி பொறியியல் கல்லூரியிலும்,

மணிகண்டன் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
சேதுராப்பட்டியில் உள்ள
அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,

மணப்பாறை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
வேங்கை குறிச்சியில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும்,

வையம்பட்டி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
ஆலத்தூரில் உள்ள
ஆதவன் கலை அறிவியல் கல்லூரியிலும்,

மருங்காபுரி ஒன்றியத்திற்கு நடைபெற்ற வாக்குபதிவு வாக்குகளை
வளநாடு கைகாட்டியில் உள்ள
விடியல் மெட்ரிக் பள்ளியிலும்
எண்ணப்பட்டு வருகிறது
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஷுவல்:
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரி

Saturday, December 21, 2019

On Saturday, December 21, 2019 by Tamilnewstv in ,    



திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன்


என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்


அவர் கூறுகையில் புங்கனூர் ஊராட்சி தனி வருவாய் கிராமமாக பிரித்து புதிய கிராம நிர்வாக அலுவலகம் விஏஓ அமைக்கப்படும்.


விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்லணை வாரி நெடு நிலை வரை தார்சாலை அமைக்கப்படும்.
புங்கனூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்படும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு உதவி தொகைகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற கணினி வசதியுடன் கூடிய இளைஞர்கள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி நவீன நூலகம் ஆக மாற்றப்படும் மேலத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கீழத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் தண்ணி நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் கொத்தனார் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் மசூதி செய்யப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டித்தரப்படும் புதுத் தெருவில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகளாக மாற்றி தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கலிங்கன் காட்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார் இத்தனை ஊராட்சி தலைவர் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யாமல் இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றாமல் உள்ளது மேலே அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செய்து தருவேன் என்று தாமோதரன் தெரிவித்தார்

Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in ,    
*குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து AIYF சார்பாக  திருச்சியில் ஆர்ப்பாட்டம்*

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்,  மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும்  திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

Tuesday, December 17, 2019

On Tuesday, December 17, 2019 by Tamilnewstv in ,    


திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.


24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Monday, November 25, 2019

On Monday, November 25, 2019 by Tamilnewstv in ,    
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,


காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு ....
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க  ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,(  பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....



மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....

Sunday, October 13, 2019

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
 மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, சுவாமிநாதன், இளங்கோவன், யோகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Monday, June 24, 2019

On Monday, June 24, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி   ஜூன் 24

பொறியியல் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம்



 இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று தொலைநோக்கு - 2019 என்ற பெயரில் திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் மற்றும் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் துறை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொடக்க கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர்  மாணவர்களுக்கு விளக்க உரையை வழங்கினார்.

இக்கத்தரங்கில்
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு தொழில்நுட்பக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைவிளக்கங்களையும்,  மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு  என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில்லை மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப்பங்கள், அயல்நாட்டு மொழிகள், skills எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.


பேட்டி:
1) புருஷேத்தம்மன்,
2) முனிராஜ்

Saturday, June 01, 2019

திருச்சி

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.


கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது.





இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Friday, May 24, 2019

On Friday, May 24, 2019 by Tamilnewstv in ,    
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர்



திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.

எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

திருநாவுக்கரசர்

பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.

Thursday, March 28, 2019

On Thursday, March 28, 2019 by Tamilnewstv in ,    
நத்தஹர்வலி தர்காவில் வழிபட்ட அமமுக வேட்பாளர்

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் வலி தர்காவில் நத்தர் அவர்களின் கலீபா அப்துர் ரகுமான் சித்தீகி அவர்களும், வளர்ப்பு மகள்  ஹலீமா என்ற மாமா ஜிக்னியும், நத்ஹர் அவர்களின் கால்மாட்டிலும், ஷம்ஸ் கோயான் அமைச்சர் கீழ்புறத்தில் மற்றொரு அமைச்சரான ஷம்ஸ்பீரான் அடக்கம் பெற்றுள்ள இடத்தில் வழிபாடு செய்தார்கள்.அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அடங்கப் பெற்று உள்ள இடத்திற்கு வெளியே நின்று வழிபட்டு மயிலிறகால் மதிக்கப்பட்டது


மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பச்சை நிற போர்வையை போற்றி மலர்கள் தூவி வழிபட்டார்.

அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச் செயலர் சிறுபான்மை பிரிவு செயலர் நத்தர்ஷா பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Friday, March 22, 2019

On Friday, March 22, 2019 by Tamilnewstv in ,    




ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி
ஆண்டு விழா – 2019
ஜெ. ஜெ. பொறியியல் கல்லூரியின் 2019-ம் ஆண்டு விழா 22-03-2019 (வெள்ளிகிழமை) அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதலில் தமிழ்தாய் வாழ்த்து பிறகு யோகா மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கப்பட்டது.  செல்வன். னு. கெவின் ஜார்ஜ் நான்காம் ஆண்டு கணினி துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார்.  நம் கல்லூரி முதல்வர்           முனைவர். ளு. சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.  இக்கல்வி ஆண்டின் மாணவர்களின் சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். னுச. ளு. ராமமூர்த்தி செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் அவர்கள் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தார்.  ஆச. பு. ரவிச்சந்திரன் இணை செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் ஆச. யு.மு.மு ரவிச்சந்திரன் நிதிநிலை கட்டுப்பாட்டாளர் ஜெ.ஜெ. கல்விக் குழுமம்அறங்காவலர்கள்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் மற்றும் நம் கல்ல}ரியின் செயல் இயக்குநர் முனைவர். வு. சிவசங்கரன் ஆகியோர் விழா உரையாற்றி சிறப்பித்தார்கள்.



இந்த வருட ஆண்டு விழாவின் சிறப்பம்சம் நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் அவர்கள் நம் கல்லூரியின் முன்னாள் இயந்திரவியல் துறை மாணவர் என்பதே ஆகும்.
நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் கார்னியான்ஸ் தொழிற்சாலை பெரம்பலூரில் நிறுவனராக உள்ளார்.  சிறப்பு விருந்தினர் தனது உரையில் யோகா மாணவர்களை பாராட்டிää ஒரு அழகான மேற்கோளை சொல்லி தனது உரையை துவக்கினார்.  அந்த மேற்கோள் “கல்வி என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்இ வாழ்க்கை அதற்கு மேலும் உள்ளது” என்று கூறிவிட்டு இக்கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்து இன்று இந்த கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.  மேலும் தனது உரையில் மாணவர்களை பார்த்து நீங்கள் வேலை தேடுவதை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயருங்கள் என்று கூறினார்.  மேலும் மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்து ஒரு சிறந்த தொழில் முனைவராக தங்கள் எதிர்கால வாழ்க்கையில் விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அடுத்ததாக  தனது உரையில்  தானும் ஆரம்பகாலங்களில் தொழில் முனைவராக இருந்தபோது பலவிதமான தோல்விகளையும் சங்கடங்களையும் சந்தித்ததாகவும் தனது தொடர் முயற்சி மற்றும் கடின  உழைப்பாலும் ஒரு சிறந்த  வெற்றி பெற்ற தொழில் முனைவராக விளங்குவதாக கூறினார்.  தன்னுடைய நிறுவனத்தில் 92  பேர் பணி புரிவதாக பெருமையுடன் தெரிவித்தார்.   மேலும் அவர் மாணவர்கள் தொழில்; முனைவராக  ஆவதற்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கினார். தனது உறையின் இறுதியில் பார்வையாளர்களை கேள்விகள் கேட்க செய்து அனைத்திற்கும் அழகான விரிவான பதில்களை வழங்கினார்.  நம் சிறப்பு விருந்தினரின் உரை மாணவர்களை மிகவும் ஊக்குவிப்பதாக இருந்தது.
விழாவை 210 மாணவ மாணவியருக்கு கல்வி மற்றும் பல்துறை சாதனைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டன.  நம் கல்லூரியின் கலைத்துறை மாணவர்கள் பல்வேறு விதமான கலை நிகழ்சிகளை மிகவும் அழகாக செய்து காட்டினர்.  நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்ணணுவியல் துறை மாணவி எஸ். ஜே. ஜாஃப்ரின்  நன்றியுரை வழங்கினார்.

Sunday, January 06, 2019

On Sunday, January 06, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பேட்டி

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகிறார் பணியாளர்களுக்கு பணி வாய்ப்புகள் வரும் குறைபாடுகளும்  தலைவிரித்து ஆடுகின்றன 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை

ஊதிய விகிதம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பணியாளர்கள் சுமார் 30,000 பேர் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இதுகுறித்து  22.1. 2019 அன்று திருச்சியில் கருத்தரங்கம் நடத்தி டாஸ்மாக்கில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் p.முருகானந்தம் மாவட்டத் தலைவர் t.ஜவஹர்லால் நேரு மாவட்ட செயலாளர் என் கண்ணன் மாவட்ட அமைப்பு செயலாளர் s.பெருமாள் மாவட்ட இணை செயலாளர் g.பழனிச்சாமி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ஆர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் a.சுப்பிரமணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் d.தமிழரசன் மற்றும்k. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்


திருச்சி சோமரசம்பேட்டை அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் இடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் தமிழரசன் குணசேகரன் பாதிக்கப்பட்டனர் இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது பேட்டியின்போது உடனிருந்தனர்

பேட்டி பாலசுப்பிரமணியம் சிறப்புத் தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கம்

Saturday, November 18, 2017

On Saturday, November 18, 2017 by Tamilnewstv in    
பழங்காலப் பொருட்கள் கண்காட்சி.
ஸ்ரீ  சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19  தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி,   ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள  ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி,   ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.  கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.