Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010ல் அவரை திருச்சிக்கு கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். அவரது நண்பர் வீட்டில் இருவரும் தங்கினர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடினர். இரண்டு மாதங்களுக்கு பின், இருவரும் திருச்சியில் இருப்பது தெரிந்து, அங்கு சென்று அழைத்து வந்தனர். சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. விசாரைணக்குப் பின் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல், பரிமளா ஆஜரானார். விசாரணை முடிவில், சதீஷ்குமாருக்கு, நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments: