Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by farook press in ,    
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசினார்.
திருப்பூர் காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். ரோட்டரி உதவி கவர்னர் முத்துசாமி, திட்ட இயக்குனர் முரளிக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேசியதாவது:வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவோர், முட்டாள்; சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் புத்திசாலிகள். வாய்ப்புகளை உருவாக்கி கொள்பவர்கள், சாதனையாளர்கள். லட்சிய கனவுகளே, சாதனைக்கு அடித்தளமாகிறது. ஒருவர் தனது லட்சியங்களை கூறும்போது விமர்சனம் எழும். அதுவே, லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும். விமர்சனங்களே லட்சிய வாதிகளை உருவாக்குகிறது.கடந்த 2010ம் ஆண்டில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 28 பேர் மாற்றுத்திறனாளிகள். சாதிக்கும் மன உறுதி இருந்தால், எல்லா கனவுகளும் வாழ்க்கையில் நிஜமாகும். உடல் ஆரோக்கி யத்தில், முழு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் உடலில் இருந்தால், எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவையை சேர்ந்த சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் அரங்ககோபால் பேசினார். நிகழ்ச்சியில் மாணவியர், பேராசி ரியர்கள் திரளாக பங்கேற்றனர். காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் ரத்னசாமி நன்றி கூறினார்.

0 comments: