Wednesday, December 10, 2014
திருப்பூர் : "ஆதார் அட்டை பெறுவதற்கான முகாம் இன்று முதல் செயல்படும்; மக்கள் குழப்பமின்றி, அந்தந்த பகுதிகளில் பதிவு செய்யலாம்,' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆதார் அட்டை பதிவில் விடுபட்டோருக்கு, இன்று முதல் (டிச., 10) பதிவு மையம் செயல்பட உள்ளது. ஒன்று முதல் 20 வரையிலான வார்டு மக்கள், 15 வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தையும்; 21 முதல் 40வது வார்டு வரை, நல்லூர் மண்டல அலுவலகத்தையும்; 41 முதல் 60 வரை மாநகராட்சி அலுவலகத்தையும் அணுக வேண்டும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு வைத்திருப்போர், உரிய மையத்துக்கு சென்று, தங்களது தகவல் கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்; விவரம் இடம் பெற்றிருந்தால், ஆதார் அட்டைக்கான டோக்கன் கொடுக்கப்படும்.டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளான்று, குடும்பத்துடன் போட்டோ எடுப்பதற்கு, ஆதார் அட்டை மையத்துக்கு வர வேண்டும். ஆதார் அட்டைக்கு புதியதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், ஜன., 20க்கு பிறகே வழங்கப்படும். ஏற்கனவே ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து கார்டு பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கான சிலிப்பை பயன்படுத்தி, தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில், கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
போட்டோ ஏற்கனவே எடுத்திருந்தும், கைவிரல் ரேகை உள்ள சிலிப் கொடுக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட மையங்களுக்கு, வரும் ஜன., 20க்கு பின்னர் சென்று, ஆதார் அட்டையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே போட்டோ எடுத்து, ஆன் லைனில் சரிபார்க்கும் போது விவரங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்து இருந்தால், மீண்டும் பழைய சிலிப் வைத்தே புகைப்படம் எடுத்து கொள்ளலாம். ஆதார் அட்டை பெற்று, அதில் முகவரியை மாற்ற வேண்டியிருந்தால் தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் முகவரியை மாற்றி கொள்ளலாம்.எனவே, மக்கள் குழப்பமின்றி தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று, விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment