Friday, March 22, 2019
ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி
ஆண்டு விழா – 2019
முதலில் தமிழ்தாய் வாழ்த்து பிறகு யோகா மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கப்பட்டது. செல்வன். னு. கெவின் ஜார்ஜ் நான்காம் ஆண்டு கணினி துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார். நம் கல்லூரி முதல்வர் முனைவர். ளு. சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் ஆண்டு அறிக்கையை வாசித்தார். இக்கல்வி ஆண்டின் மாணவர்களின் சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். னுச. ளு. ராமமூர்த்தி செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் அவர்கள் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தார். ஆச. பு. ரவிச்சந்திரன் இணை செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் ஆச. யு.மு.மு ரவிச்சந்திரன் நிதிநிலை கட்டுப்பாட்டாளர் ஜெ.ஜெ. கல்விக் குழுமம்அறங்காவலர்கள்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் மற்றும் நம் கல்ல}ரியின் செயல் இயக்குநர் முனைவர். வு. சிவசங்கரன் ஆகியோர் விழா உரையாற்றி சிறப்பித்தார்கள்.
இந்த வருட ஆண்டு விழாவின் சிறப்பம்சம் நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் அவர்கள் நம் கல்லூரியின் முன்னாள் இயந்திரவியல் துறை மாணவர் என்பதே ஆகும்.
நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் கார்னியான்ஸ் தொழிற்சாலை பெரம்பலூரில் நிறுவனராக உள்ளார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் யோகா மாணவர்களை பாராட்டிää ஒரு அழகான மேற்கோளை சொல்லி தனது உரையை துவக்கினார். அந்த மேற்கோள் “கல்வி என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்இ வாழ்க்கை அதற்கு மேலும் உள்ளது” என்று கூறிவிட்டு இக்கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்து இன்று இந்த கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும் தனது உரையில் மாணவர்களை பார்த்து நீங்கள் வேலை தேடுவதை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயருங்கள் என்று கூறினார். மேலும் மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்து ஒரு சிறந்த தொழில் முனைவராக தங்கள் எதிர்கால வாழ்க்கையில் விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அடுத்ததாக தனது உரையில் தானும் ஆரம்பகாலங்களில் தொழில் முனைவராக இருந்தபோது பலவிதமான தோல்விகளையும் சங்கடங்களையும் சந்தித்ததாகவும் தனது தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பாலும் ஒரு சிறந்த வெற்றி பெற்ற தொழில் முனைவராக விளங்குவதாக கூறினார். தன்னுடைய நிறுவனத்தில் 92 பேர் பணி புரிவதாக பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவர் மாணவர்கள் தொழில்; முனைவராக ஆவதற்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கினார். தனது உறையின் இறுதியில் பார்வையாளர்களை கேள்விகள் கேட்க செய்து அனைத்திற்கும் அழகான விரிவான பதில்களை வழங்கினார். நம் சிறப்பு விருந்தினரின் உரை மாணவர்களை மிகவும் ஊக்குவிப்பதாக இருந்தது.
விழாவை 210 மாணவ மாணவியருக்கு கல்வி மற்றும் பல்துறை சாதனைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டன. நம் கல்லூரியின் கலைத்துறை மாணவர்கள் பல்வேறு விதமான கலை நிகழ்சிகளை மிகவும் அழகாக செய்து காட்டினர். நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்ணணுவியல் துறை மாணவி எஸ். ஜே. ஜாஃப்ரின் நன்றியுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மாமேதை அம்பேத்கார் பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமணமண்டபத்தில...
0 comments:
Post a Comment