Friday, May 24, 2019
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர்
திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
திருநாவுக்கரசர்
பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.
திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
திருநாவுக்கரசர்
பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...

0 comments:
Post a Comment