Friday, May 24, 2019
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர்
திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
திருநாவுக்கரசர்
பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.
திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
திருநாவுக்கரசர்
பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment