Saturday, February 29, 2020

On Saturday, February 29, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                
   
திருச்சியில் 
அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள்
                 

சட்டவிரோதமாக இயங்கும்  குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இன் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் 
உரிமம் பெறாத 
132ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து இன்று காலை திருச்சி மாவட்டத்தில் 
அனுமதி பெறாமல் இயங்கிய 23 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு 
அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 
23குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.
திருச்சி வயலூர் சாலையில் செயல்பட்டு வரும் பெஸ்ட் ஆக்குவா நாளைக்கு நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பேட்டி: ஹேமநாதன்
செயலாளர் 
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.

0 comments: