Monday, December 07, 2020
திருச்சி-07.12.20
விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தன்னுடைய விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களையும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்காததை கண்டித்தும் தங்களை தடுக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறை அனுமதி அளிக்கவில்லையென்றால் அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வேன் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பேட்டி: அய்யாக்கண்ணு, மாநில தலைவர்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருப்பூர் சிறு விசைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற போனஸ் பேச்சுவா...
0 comments:
Post a Comment