Monday, December 07, 2020

On Monday, December 07, 2020 by Tamilnewstv in ,    

 திருச்சி-07.12.20


விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்



மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக அவர்களை  காவல் துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தன்னுடைய விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களையும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்காததை கண்டித்தும் தங்களை தடுக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறை அனுமதி அளிக்கவில்லையென்றால் அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வேன் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பேட்டி: அய்யாக்கண்ணு, மாநில தலைவர்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

0 comments: