Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் வட்டம் வெள்ளித்திரு முத்தம் கிராமம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில் சிறிய காசுகள் சிறிய உண்டியலில் அடைக்கப்பட்டு இன்று கண்டெடுக்கப்பட்டது 
                      

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அம்பாள் சன்னதி எதிர்ப்புறம் பிரசன்ன விநாயகர் சன்னதி பின்புறம் அமைந்துள்ள கொட்டாரம் வாழைத்தோட்டம் பகுதியில் செடிகொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் பணியாளர்கள் இன்று காலைமுதல் நடைபெற்றது மேற்படி இடத்தை சுத்தம் செய்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் அமைப்பதற்காக முன்னேற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் செய்து வரப்பட்டது 
                    

மேற்படி பகுதியில் அமைந்துள்ள உதிய மரம் கீழ்ப்புறத்தில் உள்ள மணல் பகுதியில் சிறிய செம்பினால் ஆன உண்டியல் ஒன்று இருந்தது நண்பகல் 12.30 மணி அளவில் கண்டறியப்பட்டது மேற்படி உண்டியலில் சிறிய அளவிலான சுவாமி உருவம் பதித்த 504 சிறிய காசுகளும் சற்று பெரிய அளவிலான ஒரு காசும் இருந்தது ஆக மொத்தம் 505 பொற்காசுகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் திருக்கோயில் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களால் செய்யப்பட்டது 
                 

திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நகை சரிபார்க்கும் அலுவலக பணியாளர்கள் வழியாக நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேரில் வந்து மேற்படி காசுகளை பார்வையிட்டு மேற்படி இனங்கள் அனைத்தும் இனங்கள் என உறுதி செய்துள்ளதாகவும் மேற்படி சிறிய உண்டியலில் கீழ்காணும் விவரப்படி பெண்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது மேற்கண்ட 504 சிறிய பெண் காசுகளும் ஒரு பெரிய காசு காவல் ஆய்வாளர் மற்றும் இரு சாட்சிகள் முன்னிலையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையரிடம் இருந்து இன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

0 comments: