Wednesday, September 21, 2016
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.மாற்றுவழியில் இயக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் உரம் ஏற்றிக்கொண்டு கோட்டயம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் கொல்லம் அருகே நேற்று அதிகாலை திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழியாக நேற்று ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில்கள் நேற்று காலை திருப்பூர் வராமல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை, மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்பட்டன.5 மணி நேரம் தாமதம்
இதேபோல் கேரளாவுக்கு சென்று வரும் பல்வேறு ரெயில்கள் நேற்று மாற்று வழியில் இயக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால் பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் அவதி அடைந்தனர்.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு திருப்பூர் வரவேண்டிய ரப்திசாகர் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சென்றது. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் வழியாக ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இந்த ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment