Wednesday, September 21, 2016

திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.மாற்றுவழியில் இயக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் உரம் ஏற்றிக்கொண்டு கோட்டயம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் கொல்லம் அருகே நேற்று அதிகாலை திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழியாக நேற்று ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில்கள் நேற்று காலை திருப்பூர் வராமல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை, மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்பட்டன.5 மணி நேரம் தாமதம்
இதேபோல் கேரளாவுக்கு சென்று வரும் பல்வேறு ரெயில்கள் நேற்று மாற்று வழியில் இயக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால் பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் அவதி அடைந்தனர்.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு திருப்பூர் வரவேண்டிய ரப்திசாகர் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சென்றது. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் வழியாக ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இந்த ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment