Wednesday, September 21, 2016

திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.மாற்றுவழியில் இயக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் உரம் ஏற்றிக்கொண்டு கோட்டயம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் கொல்லம் அருகே நேற்று அதிகாலை திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழியாக நேற்று ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில்கள் நேற்று காலை திருப்பூர் வராமல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை, மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்பட்டன.5 மணி நேரம் தாமதம்
இதேபோல் கேரளாவுக்கு சென்று வரும் பல்வேறு ரெயில்கள் நேற்று மாற்று வழியில் இயக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால் பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் அவதி அடைந்தனர்.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு திருப்பூர் வரவேண்டிய ரப்திசாகர் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சென்றது. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் வழியாக ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இந்த ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment