Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    


புதுகை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில்

எல்பின் நிறுவனத்தினர் மதுரையில் தங்களது டாப் லீடர் களை அழைத்து கூட்டம் நடத்த இருந்தனர் ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததால் சென்னையில் ஆளுங்கட்சி காவல்துறையை எதிர்த்து நமது பலத்தை காட்ட வேண்டும் என்று மாமல்லபுரம் அருகில் உள்ள ஓர் 7 நட்சத்திர ஹோட்டலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்களது பிசினஸ் கூட்டத்தை நடத்துகின்றனர். இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்னதான் காவல்துறை திறம்பட செயல்பட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் 20 முதல் 30 சதவீத உறுப்பினர்களைத் திரட்டி ஆளும் கட்சிக்கு எதிராக மாபெரும் கூட்டத்தைத் திரட்டினர். காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறார் அவரை ஏமாற்றி இவர்கள் நடத்தும் கூட்டத்தில் காவல்துறையினர் நுழைய முடியாதபடி கூட்டத்தை நடத்துகின்றனர். என்னதான் நாம் தினமும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் வீடியோ அனுப்பினாலும் அவர்கள் மூளையை சலவை செய்து எல்பின் அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்



 பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.. பொதுமக்கள் ஏமாந்தால் காவல்துறையை நோக்கித்தான் வருவார்கள். எனவே காவல்துறை டிஜிபி அவர்கள் இந்த கூட்டம் முடியட்டும் இனி இதுபோல் எந்த கூட்டமும் தமிழகத்தில் நடைபெற விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த்

....................................................................................

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

0 comments: