Wednesday, May 27, 2020
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வுக்காக செய்திகள் வெளியிட்டு வருகிறோம் .
மேலும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று தருவதாக கூறி ஒரு வருடம் முடிந்த பின்பு அவர்கள் பணம் கேட்டு வந்தால் கொடுப்பதை வாங்கிக் கொள் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் எங்களுக்கு உள்ளது அதோடு நீ கொடுக்கும் வழக்கும் ஒன்றுதான் என்று அதன் நிறுவனர் ராஜா என்கிற அழகர்சாமி,ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இருவரும் முதலீட்டாளர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து பேசுகிறார்களாம் நாங்கள் எந்தத் துறைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியது கொடுத்து தான் நாங்கள் இந்த தொழிலை நடத்தி வருகிறோம்.
மேலும் இவர்கள் நடத்தி வரும்அறம் மக்கள் நல சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரண்டு லட்சம் நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இரண்டு லட்சம் நபர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறார்கள் என்று நினைத்தால் அதையும் அவர்கள் பிசினஸாக செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய வீடியோ பதிவை பார்த்த பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம். மத்திய அரசு மாநில அரசு முறையான விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்த...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund We the All ...
0 comments:
Post a Comment