Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
*திருச்சி வருகை தந்த பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு* 

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம்  மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 78 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  அவர்கள் இன்று             27.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ஜெகநாத், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்  விஸ்வநாதன், உதவி ஆட்சியர் பயிற்சி  சித்ரா விஜயன் துணை ஆட்சியர் பயிற்சி செல்வி சரண்யா மற்றும் பலர் உடன் உள்ளனர்.திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 38 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் செல்கின்றனர்.

0 comments: